ஜனநாயகன் படம் தேர்தலுக்கு முன்பு வெளியாகி இருந்தால் 234 தொகுதியிலும் தவெக வெற்றி பெற்று இருக்கும் என்ற அமைச்சர் செங்கோட்டையன் , காவிரி விவகாரத்தில் நேரடி பேச்சுவார்த்தை நடத்தி வெற்றி பெற முடியும் என்று நினைத்தால் அதை செய்யலாம் என தெரிவித்தார்.

ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அமைச்சர்கள் செங்கோட்டையன்,  விஜய்பாலாஜி , மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆனந்த மோகன், தமிழ்செல்வி ஆகியோருக்கு  பாராட்டு விழா நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன்,

கேள்வி : தமிழக வெற்றி கழகத்தில் அதிமுக அகதிகள் அதிகமாக இருப்பதாக முன்னாள் அமைச்சர் உதயகுமார் கருத்துக்கு:

பதில் : யார் அகதிகளாக ஆகப் போகிறார்கள் என்பது காலம்  சொல்லும். திருப்பூர் ஈரோடு நாமக்கல் பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளது இந்த பாதிப்பு குறித்து ஆராய்ந்து வருகிறோம்.

கேள்வி : விஜய் நடித்த ஜனநாயகம் படத்தின் முதல் காட்சி அமைச்சர்கள் பார்த்தது குறித்த கேள்விக்கு:

பதில் : கடலில் 84 கோடிக்கு பேனா சிலை வைப்பதாக நாங்கள் செய்தோம் இதெல்லாம் நாங்கள் கேட்கக்கூடாதா, ஏதோ ஒன்று சொல்வதற்காக பதில் சொல்லிக் கொண்டிருந்தார் மனம் சங்கடம் வரும், நாங்கள் சீனியர் பொலிட்டீஸனாக இருக்கிறார்கள் வேண்டாம் என்று நினைக்கிறேன்.

விஜய் வாழ்க்கையில் சரித்திரம் படைத்த திரைப்படத்தில் இதுதான் கடைசி படம் என்று இதை சொன்னதற்கு பிறகும் இதை முடக்கி வெளியே வராமல் செய்தது யார் என்பது நாடறியும் முதல்வரின் கடைசி படம் என்பதால் மக்கள் போய் பார்த்தார்கள். ஜனநாயகன் படம் தேர்தலுக்கு முன்பு வெளியாகி இருந்தால் 234 தொகுதியிலும் தவெக வெற்றி பெற்று இருக்கும் .

முதல்வர் அலுவலகம் இடமாற்றம் மாற்றம் செய்வது குறித்து செய்திகள் பரவிக் கொண்டிருக்கிறது, தவிர முடியும் வரை தயவுசெய்து ஒரு முடிவுகளை அரசு ஏற்கும் போது அரசே சொல்லும், அதற்காக என்னை மாதிரி இருக்கக்கூடிய அவரிடம் ஒரு கேள்விகளை கேட்டு சிக்கல்களை விட்டு கஷ்டப்படுத்த வேண்டாம்.

நீட் தேர்வு பொறுத்தவரை விஜய் என்றைக்கு குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார் தேர்தல் அறிக்கை சொல்லப்பட்டு இருக்கிறது. நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் அரசின் கொள்கை  என்பதை தெளிவாக விஜய் சொல்லி இருக்கிறார்

இதனால் நீட் தேர்வு ரத்து  குறித்து பேசினால் மட்டும் நடக்காது. கடந்த காலங்களில் தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் தமிழக அரசின் பிரதிநிதியாக கர்நாடகா மாநிலத்திற்கு சென்று காவேரி விவகாரம் குறித்து பேசினார்கள். இப்போது முதல்வர் விஜய் நேரடியாக கர்நாடக மாநிலத்திற்கு செல்கிறார். கடந்த காலங்களில் நடந்த சம்பவங்கள் தவறு என்று சொல்கிறீர்களா?

காவிரி விவகாரத்தில் நேரடி பேச்சுவார்த்தை நடத்தி வெற்றி பெற முடியும் என்று நினைத்தால் அதை செய்யலாம் இல்லையென்றால் அதனைப் பயன்படுத்தலாம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். ஈரோடு மாவட்டத்தில் புற்றுநோய் அதிகமாக உள்ள நிலையில் அதற்காக தனியாக புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.

கேள்வி : மகளிர் காண உரிமைத்தொகை 2500 ரூபாய் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படுமா கேள்விக்கு:

பதில் : தமிழக அரசின் 13 லட்சத்து 32 கோடி கடன் உள்ளது இதற்காக நாளொன்றுக்கு 328.8 கோடி ரூபாய் வட்டி கொடுக்கிறோம். இதை சரி செய்வதற்கு கால அவகாசம் தமிழர்களுக்கு தேவைப்படுகிறது கடந்த ஆட்சியில் திமுக இரண்டரை வருடங்கள் கழித்து தான் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை கொடுத்த நிலை எங்களை மட்டும் எப்போது கொடுப்பீர்கள் என்று கேட்டால் என்ன? என்றார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version