தோல்வியடைந்த மனநிலையில் இருக்கும் ஆ.ராசா, திமுகவை பாஜக பாதையில் இழுத்துச் செல்வதாக அமைச்சர் வன்னியரசு விமர்சித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வருகை தந்த சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசுக்கு ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் சீ.ம. ரமேஷ் கர்ணா, வாலாஜாபேட்டையில் உள்ள சுங்க சாவடியில் சிறப்பான வரவேற்பு அளித்தார்

இதனைத் தொடர்ந்து ராணிப்பேட்டை அருகே உள்ள சுற்றுலா மாளிகையில் அமைச்சர் வன்னியரசு செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டார்

அப்போது, தூய்மைப் பணியாளர்களை தனியார் மயமாக்கும் போக்கினை தமிழக அரசு கைவிட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்த நிலையில் தமிழக முதல்வர் அதனை ரத்து செய்து இருப்பதை மிகவும் வரவேற்பதாகவும் மேலும் திருமாவளவன் தூய்மைப் பணியாளர்களுக்காக கொடுத்த அறிக்கையில் காரணமாகவே தவெக சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா திருமாவளவனுக்கு எதிராக கண்டனத்தை தெரிவித்து இருந்ததாக தெரிவித்தார்.

திருமாவளவன் கொடுத்த ஆக்கபூர்வமான அறிக்கையை தமிழக முதல்வர் ஏற்றுக்கொண்டு இருப்பதால் தாவெக சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா விமர்சனத்தை புறக்கணிப்பதாக தெரிவித்த அமைச்சர் வன்னியரசு,

தாட்கோ வங்கி கடன் பெறுவதில் நடைமுறை சிக்கல்கள் இருந்து வரும் நிலையில் அதனை  எளிமைப்படுத்தி விண்ணப்பித்த அனைத்து பயனாளிகளுக்கும் விரைவாக கிடைக்கு வகையில் திட்டம் வகுக்கப்பட இருப்பதாகவும் அதனை விரைவில் நடைமுறைப்படுத்த போவதாகவும் தெரிவித்தார்

ஆ ராசா தேர்தல் தோல்வி அடைந்த நிலையில் மிகுந்த மன உளைச்சல் அடைந்து பலவிதமான உளறல்களை பேசி வருவதாகக் கூறிய அமைச்சர் வன்னியரசு, விடுதலை சிறுத்தைகள் மற்றும் இடதுசாரி கட்சிகளை தாக்குதல் நடத்துவது மூலமாக திமுக என்ற பேர் இயக்கத்தை பாஜக போன்று பாதையில் இழுத்து செல்கிறாரோ என்ற அச்சம் ஏற்பட்டிருப்பதாக விமர்சித்தார்.

திராவிடக் கொள்கைகளை வலிமையாக அழுத்தமாக பின்பற்றி வரும் இயக்கம் விடுதலை சிறுத்தை கட்சி மற்றும் இடதுசாரி கட்சிகள். இந்த நிலையில் விடுதலை சிறுத்தை மற்றும் இடதுசாரி கட்சிகளின் மீது விமர்சனங்கள் வைப்பது மற்றும் அவதூறு கொட்டுவது என்பதன் மூலம் ஆ ராசா என்ன சொல்ல வருகிறார் என கேள்வி எழுப்பியவர்,

விடுதலை சிறுத்தை கட்சி மற்றும் இடதுசாரி கட்சிகளை விமர்சிப்பதன் மூலம் திமுகவை பாஜக பக்கம் ஆ.ராசா இழுத்து செல்கிறாரா என்ற பின்னணியில்தான் அவர் செயல்படுகிறார் என்றம் காரணம் எழுந்துள்ளது என கூறினார்.

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இடதுசாரி கட்சிகளின் கொள்கைகளை முன்வைத்து ஆட்சி நடத்தி வருகிறார் .

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சமூக நீதி சாதி வாரி கணக்கெடுப்பு கொள்கையை முன்வைத்து முதலமைச்சரை சந்தித்து வருகிறார். அதில் எந்த தவறும் கிடையாது. விடுதலை சிறுத்தை கட்சியின் கொள்கையும் கோட்பாடும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது. அதுதான் ஆகவே அன்புமணி ராமதாஸ் முதலமைச்சரை சந்திப்பதும் நெருக்கமாக இருப்பதும் எந்த ஒரு தவறும் இல்லை என தெரிவித்தார்.

தமிழக முழுவதும் அம்பேத்கர் வெண்கல சிலை வைப்பதற்காக கோரிக்கை மனு வழங்கப்பட்டு இருப்பதன் மீது பரிசீலனை செய்து சிலைகள் வைப்பதற்கான நடைமுறைகளை எளிமையாக்கும் திட்டம் வகுக்கப்பட்டு விரைவில் செயல்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version