16 நாட்களுக்கு பிறகு அண்ணா அறிவாலயம் வந்த திமுக தலைவர் மு.க ஸ்டாலின் திமுக மறுசீரமைப்பு குழு பணிகளை கேட்டறிந்தார்.

கடந்த 4 ஆம் தேதி உதயநிதியின் மகனும் பேரனுமான  இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்கும், ஓய்வெடுப்பதற்காகவும் தனது குடும்பத்துடன் லண்டன் சென்றிருந்தார் மு.க.ஸ்டாலின்.

இந்த நிலையில் லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு கடந்த 19ஆம் தேதி சென்னை திரும்பினார்.

இந்த நிலையில் 16 நாட்களுக்குப் பிறகு அறிவாலயம் வந்த  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழக்கமான பணிகளை மேற்கொண்டு நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்தார்.

சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு திமுகவில்  கட்சியின் கட்டமைப்புகளை மறுசீரமைப்பு செய்ய திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட ஒன்பது பேர் குழு அமைக்கப்பட்டது. ஜூலை முதல் ஆய்வு கூட்டங்களை இக்குழு நடத்தி வருகிறது.

 

லண்டன் பயணத்துக்குப் பின்னர் அறிவாலயம் வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மறுசீரமைப்பு குழுவின் பணிகள் குறித்து தங்கம் தென்னரசுவிடம் கேட்டறிந்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version