தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள வேளாண் பட்ஜெட் வெற்று பட்ஜெட்டாக இருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின், வறட்சி பற்றி பேசாமல், புகழ்ச்சி பாடி முதலமைச்சரின் உச்சிகுளிர பாராட்டுமழை பொழியப் பயன்பட்டதுதான் வேளாண் பட்ஜெட் எனவும், மற்றுமொரு பெயர்மாற்ற நிகழ்வாக மட்டுமே நடந்து முடிந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

திராவிட மாடல் அரசின் திட்டங்களின் மேல் ‘வெற்றி’ என்ற லேபிளை ஒட்டினால் வேலை முடிந்தது என்று இந்த அரசு நினைக்கிறதா என வினா எழுப்பியுள்ள மு.க.ஸ்டாலின்,

குறுவை சாகுபடி பாதித்து அரசின் உதவிக்கரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் டெல்டா உழவர்களுக்கு எதுவுமில்லாத, வெற்று பட்ஜெட்டாக இந்த வேளாண் நிதிநிலை அறிக்கை அமைந்திருப்பதாகச் சாடியுள்ளார்.

உழவர் பெருமக்களின் கோரிக்கைகளை உரத்த குரலில் இந்தக் கூட்டத்தொடர் முழுவதும் கழக உறுப்பினர்கள் எழுப்புவார்கள். உறக்கத்தில் இருக்கும் அரசு விழித்துக் கொண்டு பதில் சொல்லியாக வேண்டும். தீர்வு கிடைக்க வேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version