Close Menu
    What's Hot

    “இது தான் வைகோவின் உண்மையான முகம்…” –  திமுக காட்டம்

    ராணுவத் தளபதி உபேந்திர திரிவேதி பணி ஓய்வு..! புதிய தளபதியாக தீரஜ் சேத் பொறுப்பேற்பு..!

    ஆணவக்கொலை கொடூரம்?. தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட காதல் ஜோடி!. போலீசார் விசாரணை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ஆயிரக் கணக்கான இடங்கள் காலி; அரசு கல்லூரிகளில் சேர்க்கையை முறைப்படுத்துக – அரசுக்கு மமக வலியுறுத்தல்
    Featured

    ஆயிரக் கணக்கான இடங்கள் காலி; அரசு கல்லூரிகளில் சேர்க்கையை முறைப்படுத்துக – அரசுக்கு மமக வலியுறுத்தல்

    Editor TN TalksBy Editor TN TalksJune 30, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    008 mmk
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாடு அரசு கலைக்கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான இடங்கள் காலியாக உள்ளதால் மாணவர் சேர்க்கை நடவடிக்கையை சீரமைக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இந்த ஆண்டும் ஆயிரக்கணக்கான இடங்கள் காலியாக உள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் கவலை அளிக்கின்றன. ஒரே மாநிலத்தில் தனியார் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை விரைவாக நிறைவு செய்து கொள்ளும் நிலையில், அரசு கல்லூரிகளில் மட்டும் பெருமளவில் இடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது, தற்போதைய சேர்க்கை முறையில் உள்ள குறைகளை வெளிப்படுத்துகிறது.

    தமிழகத்தில் 1,044 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ள நிலையில், அரசு கல்லூரிகளில் முதல் கட்ட கலந்தாய்வுக்குப் பிறகும் 43 சதவீத இடங்கள் காலியாக இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது.

    இது மாணவர்களின் ஆர்வக் குறைவு அல்ல; மாறாக, சேர்க்கை நடைமுறைகளில் உள்ள திட்டமிடல் குறைபாட்டின் வெளிப்பாடாகும்.

    அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளுக்கான சேர்க்கை நடைமுறைகள் ஒருங்கிணைக்கப்படாமல் இருப்பதால், மாணவர்களும் பெற்றோர்களும் பெரும் குழப்பத்திற்கு உள்ளாகின்றனர்.

    குறிப்பாக கிராமப்புற மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்கள் இந்த நிலைமையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

    அரசு கல்லூரிகளில் தரமான கல்வி குறைந்த கட்டணத்தில் கிடைக்கக்கூடிய சூழல் இருந்தும், நிர்வாக தாமதங்கள் மற்றும் ஒருங்கிணைப்பு இல்லாமை காரணமாக மாணவர்கள் தனியார் கல்லூரிகளுக்கு தள்ளப்படுகின்றனர்.

    தனியார் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு நடைபெற்று முடிந்த பிறகே நடைபெறுகின்றது. இதே நடைமுறை கலை மற்றும் அறிவியல் கல்லூரி சேர்க்கையிலும் பின்பற்றப்பட வேண்டும். எனவே, அனைத்து கல்லூரிகளுக்கும் ஒரே நேரத்தில் சேர்க்கை செயல்முறையை நடைமுறைப்படுத்தும் வகையில் மையப்படுத்தப்பட்ட ஆன்லைன் கலந்தாய்வு முறையை தமிழக அரசு உருவாக்க வேண்டும்.

    மேலும், அரசு கல்லூரிகளின் சேர்க்கை அட்டவணை, காலியிட விவரங்கள் மற்றும் கலந்தாய்வு தகவல்கள் முழுமையாக வெளிப்படையாக வெளியிடப்பட வேண்டும். உயர்கல்வி என்பது சமூக நீதியின் அடித்தளம். அந்த வாய்ப்பை ஏழை மற்றும் நடுத்தர குடும்ப மாணவர்கள் இழக்காதவாறு, அரசு உடனடியாக செயல்திறன் மிக்க சேர்க்கை சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்துகிறது.

    College Admissions Government Colleges MMK Vacant Seats
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவெளியே வராத ஜான் ஆரோக்கியசாமி.. இப்போது திடீர் என்ட்ரி.. காரணம் என்ன?
    Next Article ”சம்பள பாக்கி ரூ.8.39கோடியை உடனடியாக தருக”…! உயர்நீதிமன்றத்தில் சுதா கொங்கரா வழக்கு..!
    Editor TN Talks

    Related Posts

    “இது தான் வைகோவின் உண்மையான முகம்…” –  திமுக காட்டம்

    June 30, 2026

    ராணுவத் தளபதி உபேந்திர திரிவேதி பணி ஓய்வு..! புதிய தளபதியாக தீரஜ் சேத் பொறுப்பேற்பு..!

    June 30, 2026

    ஆணவக்கொலை கொடூரம்?. தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட காதல் ஜோடி!. போலீசார் விசாரணை!

    June 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “இது தான் வைகோவின் உண்மையான முகம்…” –  திமுக காட்டம்

    ராணுவத் தளபதி உபேந்திர திரிவேதி பணி ஓய்வு..! புதிய தளபதியாக தீரஜ் சேத் பொறுப்பேற்பு..!

    ஆணவக்கொலை கொடூரம்?. தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட காதல் ஜோடி!. போலீசார் விசாரணை!

    நம்பி வந்தவர்களை விட்டுவிட்டு பதவி வாங்க தயாரில்லை- எஸ்பி.வேலுமணி ஆவேசம் – வைரலாகும் வீடியோ

    மும்மொழித் திட்டம் திரும்பப்பெறப்படவில்லை; ரவிக்குமார் எம்.பி பாய்ச்சல்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.