Close Menu
    What's Hot

    வழக்கறிஞர்களும் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும்..! சென்னை உயர்நீதிமன்றம் கருத்து..!

    நள்ளிரவில் வெடித்த பதற்றம்… அமெரிக்க தளங்களை குறிவைத்து ஏவுகணைகளை ஏவிய ஈரான்!

    ரெடியா.. போலாமா..?? இன்று சென்னை மெட்ரோவில் பயணித்து ஆய்வு செய்கிறார் முதல்வர் விஜய்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»பழனி நில மோசடி வழக்கில் சிபிசிஐடி அதிரடி ஆக்ஷன்..!! அதிகாலையில் 4 பேரை சுற்றிவளைத்து கைது!
    Featured

    பழனி நில மோசடி வழக்கில் சிபிசிஐடி அதிரடி ஆக்ஷன்..!! அதிகாலையில் 4 பேரை சுற்றிவளைத்து கைது!

    editor5By editor5July 29, 2026Updated:July 29, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 13 13
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் மடத்திற்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள 1.4 ஏக்கர் நிலத்தை முறைகேடாக வெறும் ரூ.2 கோடிக்கு தனியாருக்கு விற்பனை செய்த விவகாரத்தில், சிபிசிஐடி போலீசார் இன்று அதிகாலையில் மூன்று பேரை அதிரடியாக கைது செய்தனர். ஏற்கனவே ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    1888ஆம் ஆண்டு பாலசமுத்திரத்தைச் சேர்ந்த குப்புச்சாமி மணியக்காரர் என்பவர், மடம் கட்டவும் இந்து மதக் கோட்பாடுகளைப் பரப்பவும் என தர்மசாசனமாக இந்த நிலத்தை வழங்கியிருந்தார். அதில் விற்பனை செய்யவோ, திருப்பணிகளைத் தவிர வேறு பயன்பாட்டிற்கு உபயோகிக்கவோ கூடாது என தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. நீதிமன்றங்களும் இது கோயில் நிலம் என்றும் வணிகப் பயன்பாட்டிற்கு அனுமதியில்லை என்றும் உத்தரவிட்டிருந்தன. 2025 செப்டம்பரில் கோயில் நிர்வாகம் இந்த நிலத்தைக் கையகப்படுத்தி, பக்தர்களுக்கான இலவச வாகன நிறுத்துமிடமாக மாற்றியிருந்தது.

    இருந்தபோதிலும், கடந்த ஜூலை 6ஆம் தேதி திண்டுக்கல் பதிவாளர் விடுப்பில் இருந்தபோது, கொடைக்கானல் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் ஒருநாள் பொறுப்பேற்று, முருகதாஸ் சுவாமிகள் என்பவர் மடத்துக்காரர் எனக் கூறி வெள்ளதுரை, சேதுபதி ஆகியோருக்கு பத்திரப் பதிவு செய்தார். கோயில் நிலமா எனச் சரிபார்க்காமல் பதிவு செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்து சமய அறநிலையத்துறை நீதிமன்றத்தில் முறையிட்டதைத் தொடர்ந்து, மதுரை உயர்நீதிமன்றக் கிளை அந்தப் பத்திரத்தை ரத்து செய்தது.

    தவெக கூட்டணி கட்சிகளின் அழுத்தத்தையடுத்து தமிழக அரசு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றியது. அதிகாரிகளின் வீடு, அலுவலகங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. ஜஸ்டின் மணிகண்டன் முன்ஜாமின் பெற்று, கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது. இது குறித்து பல தரப்பினரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.

    இந்த நிலையில், சிபிசிஐடி அதிகாலை நடவடிக்கையில் வெள்ளத்துரை, முருகதாஸ் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து நடைபெற்று வந்த விசாரணையில், பழனி டி.கே.என் புதூர் பகுதியை சேர்ந்த சேதுபதி என்பவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

    #CBCID #Temple #PalaniTemple #LandCase land scam palani murugan temple
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபூங்காவனம் நியாபகமிருக்கா..?? பிரபல ‘திருமதி செல்வம்’ சீரியல் நடிகர் ஜெயமணி காலமானார்..!!
    Next Article காமன்வெல்த் அரங்கில் இந்தியாவின் பதக்கப் பட்டியல்..!! யார் என்ன வென்றார்கள்?
    editor5

    Related Posts

    வழக்கறிஞர்களும் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும்..! சென்னை உயர்நீதிமன்றம் கருத்து..!

    July 29, 2026

    நள்ளிரவில் வெடித்த பதற்றம்… அமெரிக்க தளங்களை குறிவைத்து ஏவுகணைகளை ஏவிய ஈரான்!

    July 29, 2026

    ரெடியா.. போலாமா..?? இன்று சென்னை மெட்ரோவில் பயணித்து ஆய்வு செய்கிறார் முதல்வர் விஜய்!

    July 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வழக்கறிஞர்களும் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும்..! சென்னை உயர்நீதிமன்றம் கருத்து..!

    நள்ளிரவில் வெடித்த பதற்றம்… அமெரிக்க தளங்களை குறிவைத்து ஏவுகணைகளை ஏவிய ஈரான்!

    ரெடியா.. போலாமா..?? இன்று சென்னை மெட்ரோவில் பயணித்து ஆய்வு செய்கிறார் முதல்வர் விஜய்!

    பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ரத்தக்களரி..!! போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் பலி..!!

    காமன்வெல்த் அரங்கில் இந்தியாவின் பதக்கப் பட்டியல்..!! யார் என்ன வென்றார்கள்?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.