Close Menu
    What's Hot

    HIV பாதிப்பில் 7,000+ மாணவர்கள்.. கர்நாடகாவில் வெளிச்சத்துக்கு வந்த உண்மை நிலவரம்..!!

    CJP மீண்டும் போராட்டம் நடத்துமா? ஜந்தர் மந்தரில் உச்சகட்ட பாதுகாப்பு!

    4 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவுக்கு என்ன காரணம்? பதிலளிக்க சபாநாயகர் நோட்டீஸ்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»”அதிகாரிகளே சிறந்த நீதிபதிகள்… பொதுநல வழக்குகள் திட்டங்களை முடக்கும் மேடையல்ல!”
    Featured

    ”அதிகாரிகளே சிறந்த நீதிபதிகள்… பொதுநல வழக்குகள் திட்டங்களை முடக்கும் மேடையல்ல!”

    Editor web2By Editor web2June 13, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Madras High Court
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சட்ட விதிமீறல்களை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டாமல், அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் சாதாரணமாகக் கேள்வி எழுப்பும் ஒரு மேடையாகப் பொதுநல வழக்குகளைத் தரம் குறைக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

    சென்னை ஆழ்வார்ப்பேட்டையைச் சேர்ந்த ஏ.விஸ்வநாதன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோயிலூரில், புகழ்பெற்ற உலகளந்த பெருமாள் கோவில் அருகில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது.

    தற்போது கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்திலிருந்து வெறும் 400 மீட்டர் தூரத்திலேயே ஏற்கனவே ஒரு பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது.

    எனவே, புதிய பேருந்து நிலையம் கட்டுவது அரசுக்குப் பணத்தை வீணடிக்கும் தேவையற்ற செலவாகும். தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பழமையான கோவிலுக்கு அருகில் பேருந்து நிலையம் அமைப்பது பாதுகாப்புச் சட்டங்களுக்கு எதிரானது. இது தொடர்பாக பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் அனுப்பிய புகார்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

    அடிப்படை சட்ட விதிமீறல்கள் என்ன என்பதைச் சட்டப்பூர்வமாக நிரூபிக்காமல், வெறும் புகைப்படங்களை மட்டுமே ஆதாரமாக வைத்துத் தாக்கல் செய்யப்படும் பொதுநல வழக்குகளை ஏற்றுக்கொண்டு, மக்கள் நலனுக்கான வளர்ச்சிப் பணிகளை நீதிமன்றம் முடக்காது.

    அதிகாரிகளே சிறந்த நீதிபதிகள்

    ஒரு ஊரின் நகர்ப்புற வளர்ச்சி, எதிர்காலப் போக்குவரத்து நெரிசல் மற்றும் மக்கள் தொகை பெருக்கம் ஆகியவற்றை மதிப்பிட வேண்டியது அதிகாரிகளின் வேலை. ஒரு பேருந்து நிலையம் எந்த இடத்தில் அமைய வேண்டும் என்பதை முடிவு செய்ய அதிகாரிகளை விடச் சிறந்த நீதிபதிகள் யாரும் இருக்க முடியாது.

    அரசின் திட்டங்களில் வெளிப்படையான சட்டவிரோத செயல்களோ அல்லது விதிமீறல்களோ நிரூபிக்கப்படாத பட்சத்தில், நிர்வாக ரீதியான முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது எனக் கூறி நீதிபதிகள், இந்த பொதுநல வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிவாகரத்து பேப்பரை கிழித்தெறிந்து கணவருடன் சேர்ந்த மனைவி!. நீதிமன்றத்தில் நெகிழ்ச்சி!
    Next Article பீஃப் பிரியாணி சூப்பரா இருந்துச்சு..!! ரோட்டு கடையில் ருசி பார்த்த அமைச்சர்..!!
    Editor web2
    • Website

    Related Posts

    HIV பாதிப்பில் 7,000+ மாணவர்கள்.. கர்நாடகாவில் வெளிச்சத்துக்கு வந்த உண்மை நிலவரம்..!!

    July 30, 2026

    CJP மீண்டும் போராட்டம் நடத்துமா? ஜந்தர் மந்தரில் உச்சகட்ட பாதுகாப்பு!

    July 30, 2026

    4 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவுக்கு என்ன காரணம்? பதிலளிக்க சபாநாயகர் நோட்டீஸ்!

    July 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    HIV பாதிப்பில் 7,000+ மாணவர்கள்.. கர்நாடகாவில் வெளிச்சத்துக்கு வந்த உண்மை நிலவரம்..!!

    CJP மீண்டும் போராட்டம் நடத்துமா? ஜந்தர் மந்தரில் உச்சகட்ட பாதுகாப்பு!

    4 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவுக்கு என்ன காரணம்? பதிலளிக்க சபாநாயகர் நோட்டீஸ்!

    டிரம்பின் அதிரடி உத்தரவு.. ஈரானில் குண்டுவீச்சு.. உலக நாடுகளில் பரபரப்பு!

    நாள்கூலி தொழிலாளி பெண்ணுக்கு ரூ.2.75 கோடி வரி நோட்டீஸ்! அதிர்ச்சியில் குடும்பம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.