காமன் வெல்த் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ள தமிழ்நாட்டு வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான 65 கிலோ எடைப் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி வெள்ளிப் பதக்கம் வென்று மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். இந்த சாதனைக்கு தி.மு.க. தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 23-வது காமன்வெல்த் போட்டியில், பளுதூக்கும் போட்டியில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி மொத்தம் 286 கிலோ எடையைத் தூக்கி இரண்டாவது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

இந்த வெற்றியை பாராட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், பளுதூக்கலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், ஆண்கள் 65 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு மனமார்ந்த வாழ்த்துகள் எனக் கூறியுள்ள பிரதமர் மோடி,

அவரது இந்த சிறப்பான சாதனை ஒவ்வொரு இந்தியரையும் மகிழ்ச்சியடையச் செய்து, பெருமைப்பட வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். எதிர்காலப் போட்டிகளிலும் அவர் மேலும் பல வெற்றிகளைப் பெற தனது மனமார்ந்த நல்வாழ்த்துகளையும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version