Close Menu
    What's Hot

    “செம்ம படம், ரொம்ப ஜாலி!”: விஷ்ணு விஷாலை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

    மலேசியாவில் ‘ஜெயிலர் 2’ ஆடியோ லான்ச்? டத்தோ அப்துல் மாலிக்கை சந்தித்த ரஜினிகாந்த்

    கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில் சேவை கடும் பாதிப்பு: பயணிகள் தவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»“ஊழலை சுட்டிக்காட்டுங்கள்; புகார்கள் உண்மையானால் நேரடி நடவடிக்கை!. அமைச்சர் செங்கோட்டையன்!
    Featured

    “ஊழலை சுட்டிக்காட்டுங்கள்; புகார்கள் உண்மையானால் நேரடி நடவடிக்கை!. அமைச்சர் செங்கோட்டையன்!

    Editor web3By Editor web3May 30, 2026Updated:May 30, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    13cb Sengottaiyan1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஊழல் என்பதே இனி நடந்துவிடக்கூடாது என்பதில் தீவிர கண்காணிப்புடன்  இருப்பதாகவும் அவ்வாறு எங்கேயும் ஊழல் நடந்தால் அதனை பொதுமக்கள் சுட்டிக்காட்டுமாறு வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தியுள்ளார்.

    கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் நேர்மையான மற்றும் தூய்மையான நிர்வாகத்தை வழங்க வேண்டும் என்பதே முதலமைச்சரின் முதன்மை நோக்கமாகும். அதற்கேற்பவே அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. ஊழலற்ற நேர்மையான ஆட்சியை வழங்குவதே அரசின் நோக்கம் என்று குறிப்பிட்டார். ஊழல் நடந்ததற்கான தகவல் உண்மையாக இருந்தால், அதில் தனது நேரடி கவனத்துடன் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சி குறித்துப் பேசிய அவர், இந்தியாவில் ஒரு புதிய இயக்கம் தொடங்கப்பட்டு இரண்டே ஆண்டுகளில், பணநாயகத்தை வீழ்த்தி ஜனநாயகத்தை நிலைநாட்டியுள்ளதாகக் குறிப்பிட்டார். மக்கள் என்றென்றைக்கும் முதலமைச்சராக இருக்கப்போகும் விஜய் அவர்களுக்குத் தங்களின் வாக்குகளை அன்றே அளித்துவிட்டார்கள் என்று தெரிவித்தார்.

    வருவாய்த்துறையின் வரவு-செலவு தொடர்பான புள்ளிவிவரங்களை முழுமையாகச் சமர்ப்பிக்கக் குறைந்தது ஒரு மாத காலமாவது அவகாசம் தேவை. தற்போது அதற்கான விவரங்கள் கையில் இல்லை. எனினும், ஏழை எளிய மக்களுக்குப் பட்டா வழங்குவதில் ஏதேனும் குளறுபடிகள் அல்லது தவறுகள் இருந்தால், அதனை நேரடியாகத் தனது கவனத்திற்குக் கொண்டு வரலாம்; உடனடியாக அதற்குத் தீர்வு காணப்படும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சொத்துவரி மற்றும் குப்பை வரி உயர்வு தொடர்பான கேள்விகளுக்கு, அது உள்ளாட்சித் துறை சார்ந்த விஷயம் என்பதால் சம்பந்தப்பட்ட அமைச்சரிடமே கேட்க வேண்டும் என்று கூறிய அவர், சட்டம் ஒழுங்கு குறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் கடந்து சென்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅஜித்குமார் தாயார் மரணம் – அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி
    Next Article தமிழக நிதிநிலை குறித்து 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை..!! அமைச்சர் மரிய வில்சன் தகவல்..!!
    Editor web3
    • Website

    Related Posts

    கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில் சேவை கடும் பாதிப்பு: பயணிகள் தவிப்பு!

    July 14, 2026

    கும்மிடிப்பூண்டி தொழிற்சாலை வெடி விபத்து: உயிரிழந்தவர் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவிப்பு!

    July 14, 2026

    பெண்களை ஏமாற்றி, ஆபாசப் படங்கள்: நாகர்கோவில் காசி வழக்கில் நீதிமன்றம் அதிரடி!

    July 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “செம்ம படம், ரொம்ப ஜாலி!”: விஷ்ணு விஷாலை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

    மலேசியாவில் ‘ஜெயிலர் 2’ ஆடியோ லான்ச்? டத்தோ அப்துல் மாலிக்கை சந்தித்த ரஜினிகாந்த்

    கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில் சேவை கடும் பாதிப்பு: பயணிகள் தவிப்பு!

    கும்மிடிப்பூண்டி தொழிற்சாலை வெடி விபத்து: உயிரிழந்தவர் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவிப்பு!

    பெண்களை ஏமாற்றி, ஆபாசப் படங்கள்: நாகர்கோவில் காசி வழக்கில் நீதிமன்றம் அதிரடி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.