Close Menu
    What's Hot

    அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் சிக்கன் பிரியாணி? அமைச்சர் ராஜ்மோகன் தகவல்..!!

    தமிழ்நாட்டின் நலன்… ஒன்று சேரும் கூட்டணிக் கட்சி எம்.பிக்கள்- திமுக புறக்கணிப்பு?

    மீண்டும் சிக்கலில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி..! 41 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தீண்டாமைக்கு முற்றுப்புள்ளி!. சாதிய பாகுபாட்டை உடைத்து இயக்கப்பட்ட அரசு பேருந்து!.
    Featured

    தீண்டாமைக்கு முற்றுப்புள்ளி!. சாதிய பாகுபாட்டை உடைத்து இயக்கப்பட்ட அரசு பேருந்து!.

    Editor web3By Editor web3June 6, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    kovai bus
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த கெம்பனூர் ஊராட்சியில், நீண்டகாலமாக நிலவி வந்ததாகக் கூறப்படும் சாதிய பாகுபாட்டிற்கு தீர்வு காணும் வகையில், பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிக்கு இன்று முதல் அரசு பேருந்து சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    காந்திபுரத்திலிருந்து கெம்பனூர் வரை இயக்கப்படும் அரசு நகர பேருந்து (எண்: 21), பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் அண்ணா நகர் பகுதிக்குள் செல்லாமல் புறக்கணிக்கப்பட்டு வந்ததாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதனால் மாணவர்கள், முதியவர்கள் மற்றும் தொழிலாளர்கள் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். இது மறைமுகமான தீண்டாமை என்றும் குற்றம்சாட்டப்பட்டது.

    சமீபத்தில் கோவை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு அவர்களிடம், அண்ணா நகர் பகுதி மக்கள் தங்களுக்கு நேரும் இந்த சமூகப் பாகுபாடு குறித்து நேரில் மனு அளித்தனர். தங்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்றும், பேருந்து சேவையை தங்களது பகுதி வரை நீட்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

    மனுவை பரிசீலித்த அமைச்சர், உடனடியாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன் தொடர்ச்சியாக, போக்குவரத்துத் துறையும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து இதற்கான ஏற்பாடுகளைச் செய்தன.

    இதையடுத்து, இன்று முதல் அரசு பேருந்து எண் 21 அண்ணா நகர் பகுதிக்குள் இயக்கப்பட்டது. பல ஆண்டு கால சமூக அநீதிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, தங்களுக்கு போக்குவரத்து வசதி கிடைத்ததால் அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியுடனும் மகிழ்ச்சியுடனும் பேருந்தை வரவேற்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎங்களை துடைத்தெறியவே முடியாது..!! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் ஆப்ஜித் தீப்கே அதிரடி பேச்சு..!!
    Next Article உள்ளாட்சித் தேர்தல்… அடித்து ஆடப்போகும் தவெக… திமுகவின் நிலை என்னவாகும்?
    Editor web3
    • Website

    Related Posts

    அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் சிக்கன் பிரியாணி? அமைச்சர் ராஜ்மோகன் தகவல்..!!

    July 29, 2026

    தமிழ்நாட்டின் நலன்… ஒன்று சேரும் கூட்டணிக் கட்சி எம்.பிக்கள்- திமுக புறக்கணிப்பு?

    July 29, 2026

    மீண்டும் சிக்கலில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி..! 41 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை..!

    July 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் சிக்கன் பிரியாணி? அமைச்சர் ராஜ்மோகன் தகவல்..!!

    தமிழ்நாட்டின் நலன்… ஒன்று சேரும் கூட்டணிக் கட்சி எம்.பிக்கள்- திமுக புறக்கணிப்பு?

    மீண்டும் சிக்கலில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி..! 41 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை..!

    மேகதாது பிரச்னையில் திமுக அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறது… மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு

    தனுஷின் அரசியல் வருகை.. திமுக, அதிமுகவின் எதிர்காலம் குறித்து பரபரப்பு கணிப்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.