முன்னாள் அமைச்சர் V. Senthil Balaji மீது வருமானத்திற்கு அதிகமான சொத்து (Disproportionate Assets – DA) வழக்கைதமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் (DVAC)வழக்குப் பதிவு செய்துள்ளது.
விசாரணையின் ஒரு பகுதியாக, மொத்தம் 41 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை
* சென்னையில் 14 இடங்கள்
* கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் ராமேஸ்வரப்பட்டி வீடு
* அவரது உதவியாளர் சுப்பிரமணியின் வீடு
* கரூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் பாஸ்கரின் வீடு
* ரமேஷ், கார்த்திக் ஆகியோரின் வீடுகள்
* கரூரில் உள்ள TASMACமண்டல அலுவலகம்
ஆகிய இடங்களிலும் சோதனைகள் நடைபெற்று வருகிறது. DVAC அதிகாரிகள் வழக்கு பதிவு செய்யப்பட்டதை உறுதி செய்துள்ள நிலையில், எந்த ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன யாரும் கைது செய்யப்பட்டார்களா என்பது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.
இந்த வழக்கின் மைய குற்றச்சாட்டு செந்தில் பாலாஜி மற்றும் மற்ற குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், தங்களின் அறியப்பட்ட வருமானத்தை விட அதிக மதிப்புள்ள சொத்துகளை சட்டவிரோதமாக சேர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
