Close Menu
    What's Hot

    சி.எம். விஜய் சொல்வது உண்மையா?  சிபிஎம் செயலாளர் பதில்!

    ”அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்!” – விஜய்யின் பிறந்த நாள் பரிசு?

    நலத்திட்ட உதவிக்கு லஞ்சம்!. சமூக நலத்துறை பெண் அதிகாரிகள் 3 பேர் கைது!. லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ரூ.12 கோடி சம்பள குறைப்பு!. மீண்டும் டெல்லி அணிக்கு திரும்பினார் ரிஷப் பண்ட்!
    Featured

    ரூ.12 கோடி சம்பள குறைப்பு!. மீண்டும் டெல்லி அணிக்கு திரும்பினார் ரிஷப் பண்ட்!

    Editor web3By Editor web3June 23, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Rishabh Pant return
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்திய கிரிக்கெட் வட்டாரத்தை அதிரவைக்கும் வகையில், ஐபிஎல் தொடரின் மிகப்பெரிய வீரர்களின் பரிமாற்றம் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்  அணிகளுக்கு இடையே இன்று அதிகாரப்பூர்வமாக நடந்துள்ளது. டெல்லி அணியின் முன்னாள் கேப்டனும் விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட் மீண்டும் தனது பழைய அணியான டெல்லி கேபிடல்ஸ்க்கு திரும்பியுள்ளார். அதற்குப் பதிலாக டெல்லி அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் லக்னோ அணியில் இணைந்துள்ளார்.

    கடந்த 2025 மெகா ஏலத்தில் ஐபிஎல் வரலாற்றிலேயே மிக அதிகபட்ச தொகையான ரூ.27 கோடிக்கு ரிஷப் பண்ட்டை லக்னோ அணி வாங்கியிருந்தது. ஆனால், லக்னோ அணியில் கடந்த இரண்டு சீசன்களாக (2025, 2026) பண்ட்டின் பேட்டிங் மற்றும் கேப்டன்சி எதிர்பார்த்த அளவு சிறப்பாக அமையவில்லை. மேலும், லக்னோ அணி பிளே-ஆஃப் சுற்றுக்கும் தகுதி பெறவில்லை. சமீபத்தில் மே 29 அன்று அவர் லக்னோ அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகினார்.

    தற்போது டெல்லி அணிக்கு திரும்ப விருப்பம் தெரிவித்ததை அடுத்து, இந்த டிரேடிங் நடந்துள்ளது. டெல்லி அணிக்கு திரும்பியதன் மூலம் அவரது சம்பளம் ரூ.27 கோடியிலிருந்து ரூ.15 கோடியாகக் குறைந்துள்ளது. அதாவது ரூ.12 கோடி சம்பளக் குறைப்பை ஏற்றுக்கொண்டு அவர் டெல்லி அணிக்கு திரும்பியுள்ளார். டெல்லி அணிக்காக ஏற்கனவே 9 சீசன்களில் (2016-2024) விளையாடியுள்ள பண்ட், அந்த அணியின் அதிக ரன் குவித்த வீரர் (3284 ரன்கள்) என்ற பெருமையைப் பெற்றவர்.

    மறுபுறம், டெல்லி அணியின் முதன்மை சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ், அதே ரூ.13.50 கோடி ஒப்பந்தத் தொகையுடன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இணைந்துள்ளார். டெல்லி அணிக்காக 5 சீசன்களில் விளையாடி 72 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ள குல்தீப் யாதவுக்கு 2026 சீசன் சற்று சுமாராகவே அமைந்தது (12 போட்டிகளில் 10 விக்கெட்டுகள்). கொல்கத்தா, டெல்லி அணிகளைத் தொடர்ந்து குல்தீப் விளையாடப் போகும் 3-வது ஐபிஎல் அணி லக்னோ ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    confirmed DC completed the trade IPL Trade LSG return to the Delhi Rishabh pant uldeep Yadav ₹12 Crore Pay Cut
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article”மேகதாது: தொலைநோக்குச் சிந்தனை இல்லாத கோரிக்கை” – சீமான் காட்டம்
    Next Article நலத்திட்ட உதவிக்கு லஞ்சம்!. சமூக நலத்துறை பெண் அதிகாரிகள் 3 பேர் கைது!. லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி!
    Editor web3
    • Website

    Related Posts

    சி.எம். விஜய் சொல்வது உண்மையா?  சிபிஎம் செயலாளர் பதில்!

    June 23, 2026

    ”அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்!” – விஜய்யின் பிறந்த நாள் பரிசு?

    June 23, 2026

    நலத்திட்ட உதவிக்கு லஞ்சம்!. சமூக நலத்துறை பெண் அதிகாரிகள் 3 பேர் கைது!. லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி!

    June 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சி.எம். விஜய் சொல்வது உண்மையா?  சிபிஎம் செயலாளர் பதில்!

    ”அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்!” – விஜய்யின் பிறந்த நாள் பரிசு?

    நலத்திட்ட உதவிக்கு லஞ்சம்!. சமூக நலத்துறை பெண் அதிகாரிகள் 3 பேர் கைது!. லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி!

    ரூ.12 கோடி சம்பள குறைப்பு!. மீண்டும் டெல்லி அணிக்கு திரும்பினார் ரிஷப் பண்ட்!

    ”மேகதாது: தொலைநோக்குச் சிந்தனை இல்லாத கோரிக்கை” – சீமான் காட்டம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.