அண்மையில் தவெக எம்.எல்.ஏவுடன் மோதல் போக்கில் ஈடுபட்ட சென்னை மேயர் பிரியா மீது மற்றொரு சர்ச்சை எழுந்துள்ளது.

ஜூன் 4ஆம் தேதி சென்னை மாநகராட்சியின் திருவிக நகர் மண்டலத்தில் அமைந்துள்ள உருது நடுநிலைப் பள்ளியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத் திறப்பு விழாவில் மேயர் பிரியா, திரு விக நகர் தவெக எம்.எல்.ஏ பல்லவி, மாநகராட்சி கல்வி இணை ஆணையாளர் கற்பகம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அப்போது ரிப்பன் வெட்டும் நிகழ்வில் மேயருக்கு முன்னதாக எம்.எல்.ஏ ரிப்பன் வெட்டி திறந்தார். பின்பு குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சியின்போது மேயர் பிரியா விளக்கை ஏற்றினார். தொடந்து அடுத்ததாக  விளக்கேற்ற வந்த எம்.எல்.ஏ பல்லவியிடம் மெழுகுவத்தியை கொடுக்காமல் கல்வி இணை ஆணையாளருக்கு கொடுத்ததாக சர்ச்சை எழுந்தது. இதனைத் தொடந்து பல்லவி அந்த இடத்தில் இருந்து வெளியேறினார்.

இதன்பின்னர் அதே மண்டலத்தில் நடைபெற்ற மற்றுமொரு பள்ளி நிகழ்ச்சியில் இருவரும் மீண்டும் கலந்து கொண்டனர். அப்போது
மேயர் பிரியா விளக்கேற்ற அழைத்தபோதும் எம்எல்ஏ பல்லவி மறுத்துவிட்டார்.

தன்னை மேயர் அவமதித்து விட்டதாக எம்.எல்.ஏ பல்லவியும்,  புரோட்டாகால்படி மேயருக்கு அடுத்து ஐ.ஏ.எஸ் அதிகாரிதான் விளக்கேற்ற வேண்டும் என மேயரும் தங்கள் தரப்பில் கருத்து தெரிவித்தனர்.

கடந்த திமுக ஆட்சியில்  முதலமைச்சரின் காரில் மேயர் பிரியா தொங்கியபடி பயணித்தது எந்த புரோட்டாகால்படி எனக் கேள்வியும் எழுந்தது?

இந்த நிலையில் மேயர் பிரியா மீது இன்னுமொரு சர்ச்சை எழுந்துள்ளது.

அது கடந்த 4 வருடங்களாக அவர் தனது சொத்து விவரங்களைத் தாக்கல் செய்யவில்லை என்பதுதான்.

ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சங்கர் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி மாநகராட்சி மன்ற உறுப்பினர்களின் சொத்து விவரங்கள் குறித்த தகவலைக் கேட்டுள்ளார். அதில்தான் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்பட மாமன்ற உறுப்பினர்கள் 157 பேர் தங்களது சொத்து விவரங்களை கடந்த 4 ஆண்டுகளாக தாக்கல் செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி சட்டப்படி, மன்ற தேர்தலில் போட்டியிட்டவர்கள், 90 நாள்களுக்குள் தங்களது அசையும் அசையா சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். ஆண்டுதோறும் மாா்ச் 31- ஆம் தேதிக்குள் அதை புதுப்பிக்கவும் வேண்டும்.  ஆனால், 2022  தேர்தலில் போட்டியிட்டு வென்ற மேயர் பிரியா, துணை மேயா் மு.மகேஷ்குமாா் மற்றும் மண்டலக் குழுத் தலைவர்கள் என மாமன்ற உறுப்பினா்கள் 157 போ்  சொத்து விவரங்களை தாக்கல் செய்யவில்லை. வெறும் 43 மாமன்ற உறுப்பினா்கள் மட்டுமே தாக்கல் விவரங்களை அளித்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version