Close Menu
    What's Hot

    கோவை வேளாண் கல்லூரி மாணவி மர்ம மரணம்: நீதி கேட்டு உறவினர்கள் சாலை மறியல்!

    அக்னியை அணைத்த தேகம் ; காற்றில்  கலந்தது கீதம் – விடைபெற்றார் பாடகி எஸ். ஜானகி

    நெல்லை டவுன் அருகே பயங்கரம்: இளைஞர் வெட்டிப் படுகொலை– உறவினர்கள் போராட்டம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»அக்னியை அணைத்த தேகம் ; காற்றில்  கலந்தது கீதம் – விடைபெற்றார் பாடகி எஸ். ஜானகி
    Featured

    அக்னியை அணைத்த தேகம் ; காற்றில்  கலந்தது கீதம் – விடைபெற்றார் பாடகி எஸ். ஜானகி

    Editor TN TalksBy Editor TN TalksJuly 12, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    019 janaki
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திரை இசை உலகில் தனது தனித்துவமான குரலால் பல தசாப்தங்களாக கோடிக்கணக்கான ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்திருந்த  பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தனது 88-வது வயதில், வயது மூப்பின் காரணமாக மைசூரில் உயிரிழந்தார்.

    ஆந்திர மாநிலம் குண்டூரில் ஏப்ரல்23,1938ஆம் ஆண்டு பிறந்த எஸ்.ஜானகி, இளம் வயதிலேயே இசையில் ஆர்வம் கொண்டிருந்தார். தனது இசைப்பயணத்துக்காக சென்னைக்கு குடிபெயர்ந்தவர், 1957-ஆம் ஆண்டு வெளியான ‘எம்.எல்.ஏ’ என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார். தமிழில் அதே ஆண்டு ‘விதி அமையாதவன்’ என்ற படத்தின் பாடல்கள் பாடினார்.

    தொடர்ந்து  தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்பட பல்வேறு இந்திய மொழிகளிலும், சிங்களத்திலும் கூட பாடல் பாடியுள்ள எஸ்.ஜானகி 48ஆயிரம் பாடல்கலைப் பாடியுள்ளார்.

    தான் பாடும் கேரக்டரை உள்வாங்கி பாடுவதோடு, சிறு குழந்தை போல் பாடும் ஆற்றலும் கொண்டவர் பாடகி எஸ்.ஜானகி.

    இதுவரை 4 முறை தேசிய விருதுகளும், பல்வேறு மாநிலங்களின் மாநில விருதுகளையும் பெற்றுள்ளார். இந்திய அரசின் பத்மபூஷண் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட போது, கால தாமதாமதமாக வழங்கப்படுவதாகக் கூறி அந்த விருதினை ஏற்க மறுத்து பரபரப்பை ஏற்படுத்தியவர் எஸ்.ஜானகி.

    எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் எனப் பல தலைமுறை இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளார். அத்துடன் இளையராஜா, எஸ்.பி.பி. மனோ உள்பட பலருடனும் பாடல்கலைப் பாடியிருக்கிறார்.

    தனது பாடல்களின் வழியே பல்வேறு உணர்ச்சிகளைக் கடத்தி, ரசிகர்களைக் கட்டிப்போட்டு வைத்திருந்த எஸ்.ஜானகி வயது மூப்பின் காரணமாக ஜூன் 11ஆம் தேதி மைசூரில் உயிரிழந்தார்.

    அவருக்கு அரசு சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்படும் என கர்நாடக அரசு அறிவித்தனர்.

    ஜூன் 12ஆம் தேதி எஸ்.ஜானகி உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அங்குள்ள கல்லூரியில் வைக்கப்பட்டிருந்தது. திரைத்துறையினர், அரசியல்வாதிகள், பொதுமக்கள், ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

    தொடர்ந்து மாலையில் அவரது உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டு துப்பாக்கி குண்டுகள் முழங்கப்பட்டன. இதையடுத்து பாடகி எஸ்.ஜானகியின் உடல் சந்தனக் கட்டைகளில் வைக்கப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

    தனது காந்தக் குரல்களால் எல்லோரையும் வசீகரித்த எஸ்.ஜானகியின் உடலை அக்னி அரவணைத்தது. ஆனால் அவரது குரல் என்றென்றும்  காற்றில் கலந்திருக்கும் கானங்களாக!

    Final Farewell S Janaki S Janaki Funeral S Janaki Last Rites Tribute to S Janaki
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநெல்லை டவுன் அருகே பயங்கரம்: இளைஞர் வெட்டிப் படுகொலை– உறவினர்கள் போராட்டம்!
    Next Article கோவை வேளாண் கல்லூரி மாணவி மர்ம மரணம்: நீதி கேட்டு உறவினர்கள் சாலை மறியல்!
    Editor TN Talks

    Related Posts

    கோவை வேளாண் கல்லூரி மாணவி மர்ம மரணம்: நீதி கேட்டு உறவினர்கள் சாலை மறியல்!

    July 12, 2026

    நெல்லை டவுன் அருகே பயங்கரம்: இளைஞர் வெட்டிப் படுகொலை– உறவினர்கள் போராட்டம்!

    July 12, 2026

    வணிகக் கப்பல் மீது ஈரான் தாக்குதல்: 11 இந்தியர்களில் 10 பேர் மீட்பு; ஒருவர் மாயம் – இந்தியா கடும் கண்டனம்

    July 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கோவை வேளாண் கல்லூரி மாணவி மர்ம மரணம்: நீதி கேட்டு உறவினர்கள் சாலை மறியல்!

    அக்னியை அணைத்த தேகம் ; காற்றில்  கலந்தது கீதம் – விடைபெற்றார் பாடகி எஸ். ஜானகி

    நெல்லை டவுன் அருகே பயங்கரம்: இளைஞர் வெட்டிப் படுகொலை– உறவினர்கள் போராட்டம்!

    வணிகக் கப்பல் மீது ஈரான் தாக்குதல்: 11 இந்தியர்களில் 10 பேர் மீட்பு; ஒருவர் மாயம் – இந்தியா கடும் கண்டனம்

    “ராமர் கோயில் விவகாரத்தில் உயர்மட்ட நீதிமன்ற விசாரணை தேவை; நிர்வாகிகள் மீது FIR போடுக!”– காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அவனி பன்சால்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.