Close Menu
    What's Hot

    பதவியை ஏற்க அல்ல… பொறுப்பை ஏற்கச் செல்கிறேன் – மாணிக்கம் தாகூர் ட்விட்

     ஆனைமலை குப்பை கிடங்கில் பெரும் தீ விபத்து!. கரும்புகையால் மக்கள் தவிப்பு!

    தவெக அரசு அராஜகம்; திமுகவினர் கைதுக்கு எதிராக கனிமொழி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தென் கொரிய கால்பந்து பயிற்சியாளர் திடீர் ராஜினாமா!. “தகுதியற்றவர்”… அதிபர் கடும் விமர்சனம்!
    Featured

    தென் கொரிய கால்பந்து பயிற்சியாளர் திடீர் ராஜினாமா!. “தகுதியற்றவர்”… அதிபர் கடும் விமர்சனம்!

    Editor web3By Editor web3June 29, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    South Korea Head Coach Resigns
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    2026 மெக்சிகோ பிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் லீக் சுற்றோடு தென் கொரிய அணி ஏமாற்றத்துடன் வெளியேறியதைத் தொடர்ந்து, அந்நாட்டில் பெரும் அரசியல் மற்றும் விளையாட்டுத் துறை புயல் வீசத் தொடங்கியுள்ளது. அணியின் மோசமான செயல்பாடு குறித்து அதிபர் லீ ஜே மியுங் (Lee Jae Myung) அதிகாரப்பூர்வ விசாரணைக்கு உத்தரவிட்ட சில மணி நேரங்களிலேயே, தலைமைப் பயிற்சியாளர் ஹாங் மியுங்-போ (Hong Myung-bo) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    இதன் மூலம் ஹாங் மியுங்-போ-வின் இரண்டாவது பயிற்சியாளர் காலமும் தோல்வியில் முடிவடைந்துள்ளது. முன்னதாக 2014 பிரேசில் உலகக்கோப்பையிலும் இவரது பயிற்சியின் கீழ் களம் கண்ட தென் கொரியா, லீக் சுற்றுடன் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

    மெக்சிகோ, தென்னாப்பிரிக்கா மற்றும் செக் குடியரசு ஆகிய அணிகள் இடம் பெற்றிருந்த ‘குரூப் ஏ’ பிரிவில் தென் கொரியா எளிதாக அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தென்னாப்பிரிக்கா மற்றும் மெக்சிகோ அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் தலா 1-0 என்ற கணக்கில் தென் கொரியா அடுத்தடுத்து அதிர்ச்சித் தோல்விகளைத் தழுவியது. கடைசிப் போட்டியில் செக் குடியரசை 2-1 என வீழ்த்திய போதிலும், அடுத்த சுற்றான ‘ரவுண்ட் ஆப் 32’  தகுதி பெற அது போதுமானதாக அமையவில்லை.

    விசாரணை உத்தரவு வெளியான சில மணி நேரங்களிலேயே, மெக்சிகோவில் செய்தியாளர்களைச் சந்தித்த பயிற்சியாளர் ஹாங் மியுங்-போ தனது ராஜினாமாவை அறிவித்தார். “கடந்த இரண்டு வருடங்களாக நான் எடுத்த ஒவ்வொரு முடிவும் கொரிய கால்பந்தின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டது. அனைத்து முடிவுகளும் சரியாக அமைந்திருக்காது என்றாலும், என் தேசத்திற்காகவே உழைத்தேன்” என்று அவர் உருக்கமாகத் தெரிவித்தார்.

    தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங் தனது எக்ஸ் பக்கத்தில் நாட்டின் கால்பந்து கூட்டமைப்பை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். திறமைக்கு முன்னுரிமை தராமல், தகுதியற்றவர்களைத் தலைமைப் பதவிகளில் அமர்த்தும்போது இப்படிப்பட்ட தோல்விகள் தான் மிஞ்சும். இந்த ஏற்றுக்கொள்ள முடியாத முடிவினால் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஏமாற்றத்திற்கு நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். விளையாட்டுத் துறை நிர்வாகத்தில் உடனடியாகப் பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்” என்று அதிபர் பதிவிட்டுள்ளார்.

    பயிற்சியாளர் ஹாங் மீது ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான வாழ்வா-சாவா போட்டியில் அணியின் கேப்டனும் நட்சத்திர வீரருமான சன் ஹியுங்-மின்-னை (Son Heung-min) தொடக்க ஆட்டக்காரராகக் களம் இறக்காமல் பெஞ்ச்சில் அமர வைத்தது பெரும் விவாதத்தைக் கிளப்பியது. ஒரு ‘டிரா’ செய்தாலே அடுத்த சுற்றுக்கு முன்னேறலாம் என்ற சூழலில், பயிற்சியாளர் எடுத்த இந்தத் தவறான முடிவு தென் கொரியாவின் வெளியேற்றத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்தது என ஊடகங்கள் விமர்சித்துள்ளன.

    2002-ஆம் ஆண்டு உலகக்கோப்பையை இணைந்து நடத்திய தென் கொரியா, இத்தாலி மற்றும் ஸ்பெயின் போன்ற ஜாம்பவான் அணிகளை வீழ்த்தி அரையிறுதி வரை முன்னேறியதே உலகக்கோப்பை வரலாற்றில் அவர்களின் சிறந்த செயல்பாடாகும். தற்போது லீக் சுற்றோடு வெளியேறியுள்ளது அந்நாட்டு ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    FIFA World Cup exit football coach resigns Head Coach Resigns Presidential Probe South Korea
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅரசியலுக்கு அச்சாரம் போடுகிறாரா சூர்யா..?? ரசிகர் பேச்சால் இணையத்தில் கிளம்பிய விவாதம்..!!
    Next Article தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை மாற்றம்..!! மாணிக்கம் தாகூர் எம்.பி இன்று பொறுப்பேற்பு..!!
    Editor web3
    • Website

    Related Posts

    பதவியை ஏற்க அல்ல… பொறுப்பை ஏற்கச் செல்கிறேன் – மாணிக்கம் தாகூர் ட்விட்

    June 29, 2026

    தவெக அரசு அராஜகம்; திமுகவினர் கைதுக்கு எதிராக கனிமொழி!

    June 29, 2026

    விழுந்தது 6-வது விக்கெட்; அதிமுக எம்.எல்.ஏ எம்.ஆர். விஜயபாஸ்கரும் ராஜினாமா?

    June 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பதவியை ஏற்க அல்ல… பொறுப்பை ஏற்கச் செல்கிறேன் – மாணிக்கம் தாகூர் ட்விட்

     ஆனைமலை குப்பை கிடங்கில் பெரும் தீ விபத்து!. கரும்புகையால் மக்கள் தவிப்பு!

    தவெக அரசு அராஜகம்; திமுகவினர் கைதுக்கு எதிராக கனிமொழி!

    விழுந்தது 6-வது விக்கெட்; அதிமுக எம்.எல்.ஏ எம்.ஆர். விஜயபாஸ்கரும் ராஜினாமா?

    பூதாகரமானது ரூ.100 கோடி மோசடி வழக்கு..!! Ex.அமைச்சர் சிவசங்கருக்கு பறந்த சம்மன்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.