தமிழ்நாட்டில் உள்ள நிகர்நிலை மருத்துவப் பல்கலைக்கழகங்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டிலிருந்து மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும் என விசிக பொருளாளர் எஸ்.எஸ்.பாலாஜி கோரிக்கை விடுத்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், கல்லூரி அந்தஸ்திலிருந்து தன்னாட்சி (Autonomous) மற்றும் அதன் பின்னர் நிகர்நிலைப் பல்கலைக்கழக (Deemed University) அந்தஸ்துக்கு உயர்வது, தகுதியுள்ள எந்தக் கல்வி நிறுவனத்திற்கும் அடிப்படை உரிமையாகும் என்றார்.

அந்த நடைமுறையில் ஏதேனும் விதிமுறை மீறல்கள் நடந்துள்ளனவா என்பதை விசாரிப்பதில் எந்தத் தவறும் இல்லை.

ஆனால், இதை மட்டும் பேசிக் கொண்டிருப்பவர்கள், முக்கிய பிரச்சினையில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முயற்சிக்கிறார்கள் என அரசை சூசகமாகத் தாக்கினார்.

உண்மையான பிரச்சினை என்பது  நீட் (NEET) அமலுக்கு வந்த பிறகு மருத்துவக் கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள முறைகேடுகள் மற்றும் அநீதிகள்தான் எனத் தெரிவித்துள்ள எஸ்.எஸ்.பாலாஜி,

தற்போது மிகவும் அவசியமானது, நிகர்நிலை மருத்துவப் பல்கலைக்கழகங்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டிலிருந்து மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வருவதும், அவற்றுக்கான மாணவர் சேர்க்கையை தமிழ்நாடு மருத்துவப் பணிகள் மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகத்தின் (Directorate of Medical Services and Research) மருத்துவத் தேர்வுக்குழு (Medical Selection Committee) மூலம் மட்டுமே மேற்கொள்ளும் நடைமுறையை அமல்படுத்துவதுமாகும் எனக் கூறியுள்ளார். இவ்வாறு செய்வதன் வழியே நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் 50 விழுக்காடு மருத்துவ இடங்கலை மாநில அரசு நிரப்பமுடியும் எனத் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version