Close Menu
    What's Hot

    IMDb பட்டியலில் 3-வது இடம் பிடித்த ஆர். மாதவனின் ‘ஜி.டி.என்.’… எகிறும் எதிர்பார்ப்பு!

    கோவை தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை… அதிகாரிகளிடம் தீவிர விசாரணை

    மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு… மக்களுக்கு முதலமைச்சர் விஜய் அழைப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»டிஜிட்டல் மயமாகும் தமிழகச் சிறைச்சாலைகள் – ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் நிர்மல்குமார் பளீச்
    Featured

    டிஜிட்டல் மயமாகும் தமிழகச் சிறைச்சாலைகள் – ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் நிர்மல்குமார் பளீச்

    Editor TN TalksBy Editor TN TalksMay 24, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    011 nirmal kumar
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாடு சிறைச்சாலைகளை டிஜிட்டல் மயமாக்குவது குறித்து பட்ஜெட்டுக்கு முன்பாக ஆலோசனை செய்யப்பட உள்ளதாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

    முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான ஆட்சியில் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டவர்கள் தங்களது துறை சார்ந்த ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக புழல் மத்திய சிறையில் மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் ஆய்வு  மேற்கொண்டார்.

    011 nirmal kumar B

    சிறைத்துறை ஏடிஜிபி சங்கர் தலைமையிலான அதிகாரிகள் கைதிகளின் பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சரிடம் விளக்கினர். பேட்டரி வாகனம் மூலம் சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் அறைகளை பார்வையிட்டு அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர், பின்னர் சிறைவாயிலில் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது;-

    தமிழ்நாட்டில் 13 சிறைச்சாலைகள் உள்ள நிலையில் அவற்றில் உள்ள கைதிகளின் கொள்ளளவு, தற்போது அடைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அவர்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டது.

    தற்போதைய சூழலுக்கு ஏற்ப சிறைச்சாலைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய நவீன வசதிகள், பாதுகாப்பு மேம்பாடு குறித்து பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பாக ஆய்வு செய்யப்படும்.

    புழல் சிறையில் உள்ள கைதிகளை சந்திப்பதற்காக நாள்தோறும் வந்து செல்லும் 700 பார்வையாளர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

    பார்வையாளர்கள் மூலம் கைதிகளுக்கு போதைப்பொருட்கள் விநியோகம் செய்வதை தடுத்திட கூடுதலாக பாதுகாப்பு அம்சங்கள் மேற்கொள்ளப்படும்.

    சிறைக்குள் கைதிகளால் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் பொதுமக்களுக்கு விற்பனை செய்திட தொடர் நடவடிக்கை எடுக்கப்படும்.

    புழல் சிறையில் கடந்த 6 மாதங்களில் 5 கைதிகள் உயிரிழந்துள்ளனர். பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு அவர்கள் உயிரிழந்துள்ளனர். சிறையில் 2 ஆம்புலன்ஸ் தொடர்ந்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, சிறை மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    தேவையில்லாமல் வீண் பணியிட மாற்றங்கள் செய்ய வேண்டாம் என துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளேன்.

    011 nirmal kumar A

    மின்வாரியத்திலும் இதேபோன்று வீண் பணியிட மாற்றங்களை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பணியில் ஏற்பட்ட தவறுகளுக்கு தண்டனையாக கொடுக்கப்படும் பணியிட மாறுதலும் முறையான விதிமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தியுள்ளேன்.

    அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இரவு ஏற்பட்ட மின்தடை என்பது அங்குள்ள ஜெனரேட்டர் கோளாறு மற்றும் கேபிள் எரிந்ததால் ஏற்பட்டது.

    தமிழ்நாட்டில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட மின்தடையை காட்டிலும் தற்போது குறைந்து உள்ளது.

    இரவு நேரத்தில் மின்வாரிய  ஊழியர்கள் பணியில் இருப்பதில்லை எனவும் மது போதையில் இருப்பதாகவும் வரும் புகார்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நேற்று முன்தினம் ஏற்பட்ட மின்தடைக்கு தனிப்பட்ட நோக்கத்தோடு செயல்பட்ட சில நபர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    தமிழ்நாடு முழுவதும் முடிவுற்ற நிலையில் உள்ள நீதிமன்ற கட்டிடங்கள் விரைவாக திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.

    தேவைப்படும் இடங்களில் புதிய நீதிமன்ற கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    அனைவருக்கும் விரைவாக நீதி கிடைத்திட வேண்டும் என்பதற்காக நீதித்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிடீர் உடல்நலக்குறைவு!. ICU-வில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி!
    Next Article 2014-இல் திமுக செய்தது மிகப்பெரிய துரோகம் – காங்கிரஸ் பதிலடி
    Editor TN Talks

    Related Posts

    IMDb பட்டியலில் 3-வது இடம் பிடித்த ஆர். மாதவனின் ‘ஜி.டி.என்.’… எகிறும் எதிர்பார்ப்பு!

    July 17, 2026

    கோவை தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை… அதிகாரிகளிடம் தீவிர விசாரணை

    July 17, 2026

    மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு… மக்களுக்கு முதலமைச்சர் விஜய் அழைப்பு!

    July 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    IMDb பட்டியலில் 3-வது இடம் பிடித்த ஆர். மாதவனின் ‘ஜி.டி.என்.’… எகிறும் எதிர்பார்ப்பு!

    கோவை தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை… அதிகாரிகளிடம் தீவிர விசாரணை

    மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு… மக்களுக்கு முதலமைச்சர் விஜய் அழைப்பு!

    பிக் பாஸ் சீசன் 10!. முன்கூட்டியே களமிறங்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சி! ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

    இங்கிலாந்தின் அடுத்த பிரதமராகிறார் ஆண்டி பர்ன்ஹாம்… தொழிலாளர் கட்சியின் புதிய தலைவராக தேர்வு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.