Close Menu
    What's Hot

    திரையுலகை ஆளும் சக்ரவர்த்தி ‘இசைஞானி’ இளையராஜா!

    எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிட மாட்டேன்..!! திருமாவளவன் திட்டவட்டம்..!!

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»“பணவீக்க நாயகன்”… மோடி மீண்டும் தன் வேலையை காட்டிவிட்டார்!. ராகுல் காந்தி அட்டாக்!
    Featured

    “பணவீக்க நாயகன்”… மோடி மீண்டும் தன் வேலையை காட்டிவிட்டார்!. ராகுல் காந்தி அட்டாக்!

    Editor web3By Editor web3May 25, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    rahul
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தேர்தல் முடிவடைந்ததைத் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டிருப்பதைக் கண்டித்து, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, பணவீக்க நாயகன் (Inflation Man) மோடி மீண்டும் தனது வேலையைக் காட்டிவிட்டார். மக்களின் பாக்கெட்டுகளில் இருந்து சத்தமில்லாமல் பணத்தைப் பறிப்பதற்காகவே, பெட்ரோல் மற்றும் டீசல் விலையைத் தவணை முறையில் உயர்த்தி வருகிறார்கள் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

    நாட்டில் ஒரு கடுமையான பொருளாதாரப் புயல் வீசப்போகிறது என்று நான் பல மாதங்களாகவே எச்சரித்து வருகிறேன். ஆனால் பிரதமர் மோடியோ, எப்போதுமே செய்வது போல அப்போதும் தேர்தல் பிரச்சாரங்களில் மட்டுமே பிஸியாக இருந்தார். தற்போது தேர்தல் முடிவடைந்த அடுத்த கணமே, பெட்ரோல் மற்றும் டீசல் விலை 8 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இத்துடன் நின்றுவிடப் போவதில்லை, தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே தான் இருக்கப் போகிறது.

    தேர்தல் நேரத்தில் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளிப்பதும், மற்ற நேரங்களில் பொதுமக்களின் பாக்கெட்டுகளில் கை வைப்பதும்தான் இந்த ‘பணவீக்க நாயகன்’ மோடியின் ஒரே வேலையாக உள்ளது” என்று ராகுல் காந்தி மிகக் காட்டமாகச் சாடியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleBREAKING| விளாத்திகுளம் வழக்கு: கிடைத்தது நீதி..!! காமக்கொடூரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை விதிப்பு..!!
    Next Article தொடரும் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள்; இது தமிழ்நாடா, உத்தரப்பிரதேசமா? – முதலமைச்சருக்கு உதயநிதி கேள்வி
    Editor web3
    • Website

    Related Posts

    திரையுலகை ஆளும் சக்ரவர்த்தி ‘இசைஞானி’ இளையராஜா!

    June 2, 2026

    எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிட மாட்டேன்..!! திருமாவளவன் திட்டவட்டம்..!!

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திரையுலகை ஆளும் சக்ரவர்த்தி ‘இசைஞானி’ இளையராஜா!

    எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிட மாட்டேன்..!! திருமாவளவன் திட்டவட்டம்..!!

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    தமிழக அமைச்சரவை மூப்பு நிலைப் பட்டியல் வெளியீடு: முதல் 3 இடங்களில் முதலமைச்சர் விஜய், ஆனந்த், ஆதவ் அர்ஜூனா!

    தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி: இன்று 22 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள் எச்சரிக்கை’!

    Trending Posts

    திரையுலகை ஆளும் சக்ரவர்த்தி ‘இசைஞானி’ இளையராஜா!

    June 2, 2026

    எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிட மாட்டேன்..!! திருமாவளவன் திட்டவட்டம்..!!

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    தமிழக அமைச்சரவை மூப்பு நிலைப் பட்டியல் வெளியீடு: முதல் 3 இடங்களில் முதலமைச்சர் விஜய், ஆனந்த், ஆதவ் அர்ஜூனா!

    June 2, 2026

    தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி: இன்று 22 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள் எச்சரிக்கை’!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.