திருப்பத்தூரில் நக்சலைட்களால் உயிரிழந்த 4 காவலர்களுக்கு 46ஆம் ஆண்டு வீரவணக்கம் நாள் 30 குண்டுகள் முழுங்க நினைவு அஞ்சலி வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.

திருப்பத்தூர் அடுத்த ஜோலார்பேட்டையில் 1980 ஆண்டு நக்சலைட் சிவலிங்கம் என்பவரை பிடித்து ஜீப்பில் அழைத்து சென்ற போது திருப்பத்தூர் அருகே சேலம் பிரதான சாலையில் சிவலிங்கம் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை வெடிக்க செய்ததில் ஜீப்பில் இருந்த காவல் ஆய்வாளர் பழனிச்சாமி, தலைமை காவலர் ஆதிகேசவேலு, காவலர்கள் யேசுதாஸ் மற்றும் முருகேசன் ஆகியோர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.

இந்த நிலையில் ஆண்டு தோறும் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் வீரமரணம் அடைந்த 4 காவல் துறையினருக்கு திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தில் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருவது வழக்கம் இந்த நிலையில் இன்று மத்திய பாதுகாப்பு படையின் முன்னாள் இயக்குனரும் மற்றும் வீரப்பன் வேட்டையின்போது அதிரடி படைக்கு தலைமை வகித்த விஜய் அவர்களின் தலைமையில் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் தங்களது சட்டைகளில் கருப்பு பட்டை அணிந்து கொண்டனர் மேலும் இன்று வீரமரணம் அடைந்த 4 காவல்துறை அதிகாரிகளுக்கு 46ஆம் ஆண்டு வீரவணக்கம் நாள் 30 குண்டுகள் முழுங்க இன்று அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் மகேஷ், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார், திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பாளர் அக்ஷய் அனில் வாகரே மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து காவலர்கள் மற்றும் காவலர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்வில் காவல் துறை சார்ந்த அதிகாரிகள் கட்சிப் பிரமுகர்கள் மற்றும் அரசுத் துறை சார்ந்த அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version