பண்ணையார் மனப்பான்மையோடு திமுக நடந்து கொள்வதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் நினைவு நாளையொட்டு எழும்பூரில் அமைந்துள்ள அன்னாரின் உருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், தமிழை வளர்த்த பெருமைக்குரியவர் சி.பா. ஆதித்தனார், அவரது பணிகள் என்றென்றும் நினைவில் கொள்ளத்தக்கவை என்றார்.

சட்டம் ஒழுங்கு குறித்து காவல் துறையினருடன் தொடர்ந்து ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறோம். குற்றவாளிகளை எச்சரித்துளோம்.

குற்றச்சம்பவங்கள் எங்குமே நடக்காத அளவுக்கு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன எனத் தெரிவித்தார்.

சட்டமன்ற தேர்தலில் தவெக ஆட்சிக்கு வராது என்றார்கள். ஆனால்,  ஆட்சி அமைத்துக் காட்டினோம்.  தற்போது, இந்த ஆட்சி  5ஆண்டு நீடிக்காது என்றெல்லாம் ஆருடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.  மக்களின் பேராதரவோடு, 5 ஆண்டு அல்ல, 50 ஆண்டுகள் தவெக ஆட்சி தமிழ்நாட்டில் நீடிக்கும் என் நம்பிக்கை தெரிவித்த அமைச்சர் ராஜ்மோகன்,

கூட்டணிக் கட்சிகளை அடிமைகள் போல் நடத்தும் பண்ணையார் மனப்பான்மைதான் திமுகவிடம் உள்ளதாகவும்,

ஜனநாயகத்தில் எந்தக் கட்சி யாருடன் இணைய வேண்டும் என்பது, அந்தக் கட்சியின் தலைவரும் தொண்டர்களும் எடுக்க வேண்டிய முடிவு எனவும் தெரிவித்தார்.

தேசியக் கட்சியை இப்படி சிறுமைப்படுத்துவது சரியான நடவடிக்கை ஆகாது.

எந்தக் கட்சியாக இருந்தாலும் தன்னுடன்  இருக்கும்வரை நல்லகட்சி, வெளியேறி விட்டால் நல்லக்கட்சி இல்லை என்று கூறுவது ஜனநாயகத்தில் நல்லதல்ல என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version