Close Menu
    What's Hot

    ஃபிஃபா உலகக் கோப்பை 2026: “ஜெர்மனி இனி முதல் தர அணி அல்ல” – பயிற்சியாளர் நாகல்ஸ்மேன் வேதனை

    ஓடும் ரயிலில் பெண்ணுக்கு ஆபாச சைகை காட்டிய நபர்!. வைரலாகும் வீடியோ!. ரயில்வே அதிரடி நடவடிக்கை!

    எங்களைச் சீண்டுபவர்களுக்கு அதே வேகத்தில் பதில்சொல்வோம் – மாணிக்கம் தாகூர் அதிரடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»5 வருஷம் கன்ஃபார்ம்.. தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை..!! விசிக திருமாவளவன் உறுதி..!!
    Featured

    5 வருஷம் கன்ஃபார்ம்.. தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை..!! விசிக திருமாவளவன் உறுதி..!!

    editor5By editor5June 30, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 32 9
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தவெக ஆட்சி 5 ஆண்டுகளுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் வெற்றிகரமாக இயங்கும் என்பதை நாங்கள் பெரிதும் நம்புகிறேன் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் திருமாவளவன், மதுரை சின்ன சொக்கிகுளம் பகுதியில் உள்ள ஒரு தனியார் தங்கு விடுதியில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். தவெக ஆட்சி தொடராது என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “அவர் எந்தக் கோணத்தில் இந்தப் பிரச்சினையைப் பார்க்கிறார் என்பது தெரியவில்லை. எங்களைப் பொறுத்தவரை, ஆதரவு அளிக்கும் அத்தனை கட்சிகளும் வாக்குறுதியைத் தவிர வேறு வாய்ப்பில்லை என்ற நிலைப்பாட்டில்தான் உள்ளன” என்றார்.

    விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் தவெகவுக்கு அளித்த வாக்குறுதிகளை கட்டாயம் காப்பாற்றும் என்று திருமாவளவன் உறுதிப்படுத்தினார். காங்கிரஸ் கட்சி முன்னதாகவே தவெக அணிக்கு ஆதரவு மட்டுமல்லாமல், முழு கூட்டணியில் இணைந்து, நாடாளுமன்றத் தேர்தல் வரை தேவைகளை அறிவித்து உறவை உறுதிப்படுத்தியுள்ளது. இடதுசாரிகள் வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் நிலையில், ஐந்தாண்டு காலமும் ஆட்சி தொடர வேண்டும் என விரும்புவதாக திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகின்றனர். விசிகவும் அதே நிலைப்பாட்டை முன்னெடுப்பதாகக் கூறிய திருமாவளவன், “இந்த ஆட்சி ஐந்து ஆண்டுகளுக்கு எந்த இடையூறும் இல்லாமல் வெற்றிகரமாக இயங்கும் என நாங்கள் பெரிதும் நம்புகிறோம்” என்றார்.

    நாளை நடைபெறும் தவெக தோழமை கட்சிகள் கூட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “புதிய கூட்டணி அறிவிப்பு அங்கு பேசும்போதுதான் தெரியும். தேநீர் விருந்து என்ற அடிப்படையில் அழைத்துள்ளனர். கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி, சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கிறோம்” என்று பதிலளித்தார்.

    அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்வது கூட்டணிக் கட்சிகளை நம்பாமல் இருப்பதாலா என்ற கேள்விக்கு, “ராஜினாமா செய்பவர்களிடம் அதிமுகவில் என்ன பிரச்சினை, எதனால் பதவி விலகுகிறார்கள் எனக் கேட்க வேண்டும். அதுதான் விவாதிக்கப்பட வேண்டும். யூகங்களின் அடிப்படையில் விவாதங்களை மாற்ற முயற்சிகள் நடைபெறுகின்றன” என்றார்.

    இதுவரை 6 பேர் அதிமுகவில் பதவி விலகியுள்ள நிலையில், இது கட்சிக்குள் இருக்கும் முக்கிய உட்கட்சி முரண்பாடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டிய தருணம் என்று வலியுறுத்தினார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டிருப்பது அதிமுகவின் உள்ளாட்சி பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டுவதாகக் கூறினார்.

    பள்ளிகளில் சாதியை ஊக்குவிப்பதைத் தடுக்கும் நடவடிக்கையை வரவேற்ற திருமாவளவன், “செங்கோட்டையன் மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும்போது சாதியையும் பதிவு செய்ய வேண்டும் என்ற கருத்துக்கு கடுமையான எதிர்ப்பு வந்தபோது அதிர்ச்சியடைந்தோம். தற்போது அந்த முயற்சி கைவிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் சாதி அடையாளங்களை ஊக்கப்படுத்தக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளார் என்பது அவரது பேச்சிலிருந்து தெரிகிறது. இது தொடர வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

    அமைச்சர் சரத்குமார் மீதான போதைப்பொருள் பயன்பாடு குற்றச்சாட்டு குறித்து, “ஆதாரமின்றி கருத்து சொல்ல முடியாது. ஆனால் தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. கஞ்சா குக்கிராமங்கள் வரை செல்கிறது. இதற்கு யார் பின்னணி எனக் கண்டறிந்து கட்டுப்படுத்த வேண்டும்” என்றார். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் துறை மாற்றம் குறித்து அவருக்கு தெரியவில்லை என்றார்.

    thirumavalavan VCK
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசி.எம் விஜய் சார்-னு சொல்லுங்க –  அரசுப் பள்ளியில் தவெகவினர்  – மீண்டும் ஒரு ரீல்ஸ் பஞ்சாயத்து!
    Next Article பெனால்டி சூட்-அவுட் சாபம்!. மொராக்கோவிடம் தோற்று உலகக்கோப்பையை விட்டு வெளியேறிய நெதர்லாந்து!
    editor5

    Related Posts

    ஃபிஃபா உலகக் கோப்பை 2026: “ஜெர்மனி இனி முதல் தர அணி அல்ல” – பயிற்சியாளர் நாகல்ஸ்மேன் வேதனை

    June 30, 2026

    ஓடும் ரயிலில் பெண்ணுக்கு ஆபாச சைகை காட்டிய நபர்!. வைரலாகும் வீடியோ!. ரயில்வே அதிரடி நடவடிக்கை!

    June 30, 2026

    எங்களைச் சீண்டுபவர்களுக்கு அதே வேகத்தில் பதில்சொல்வோம் – மாணிக்கம் தாகூர் அதிரடி!

    June 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஃபிஃபா உலகக் கோப்பை 2026: “ஜெர்மனி இனி முதல் தர அணி அல்ல” – பயிற்சியாளர் நாகல்ஸ்மேன் வேதனை

    ஓடும் ரயிலில் பெண்ணுக்கு ஆபாச சைகை காட்டிய நபர்!. வைரலாகும் வீடியோ!. ரயில்வே அதிரடி நடவடிக்கை!

    எங்களைச் சீண்டுபவர்களுக்கு அதே வேகத்தில் பதில்சொல்வோம் – மாணிக்கம் தாகூர் அதிரடி!

    மத்திய அமைச்சக செயலாளர்களுடன் பிரதமர் மோடி இன்றுமாலை அவசர ஆலோசனை!

    “DMK Files” வழக்கில் திடீர் யூ-டர்ன்.. அண்ணாமலை மீதான வழக்கை வாபஸ் பெற்றார் டி.ஆர். பாலு..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.