பெரும்பான்மைக்குத் தேவையான 2 இடங்களைப் பெறும் நோக்கில் விசிக ஆதரவு கோரி, திருமாவளவனை சந்திக்க விஜய் செல்ல உள்ளதாக பரபரப்பு நிலவுகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வென்ற தவெக தலைவர் விஜய், ஆட்சியமைக்கத் தேவையான 118 பெரும்பான்மை பெறுவதற்காக திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைக் கோரினார்.
இதில் முதல் நபராக காங்கிரஸ் தனது 5 எம்.எல்.ஏக்களின் ஆதரவை, வழங்கியது. இதையடுத்து சில பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகள் தங்களின் தலா 2 எம்.எல்.ஏக்களின் ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளது.
இதனால் 117 இடங்கள் கிடைத்துள்ள நிலையில் மேலும் 2 எண்ணிக்கை பெறுவதற்காக விசிகவின் தயவையும் தவெக நாடியுள்ளது. கடந்த 2, 3 நாட்களாக முறையாக எவ்விதப் பதிலையும் தெரிவிக்காமல் விச்க இழுத்தடித்து வந்தது.
இந்த நிலையில் இன்று காலை முடிவை அறிவிப்பதாக திருமாவளவன் அறித்திருந்தார். இதையடுத்து அவரை விஜய் நேரில் சந்திக்க இருப்பதாகவும் தகவல் பரவியது. இதனால் விசிக அலுவலகம் உள்ள அசோக்பில்லர் பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டு பரபரப்பு நிலவி வருகிறது.
இதனிடையே விசிக தரப்பில் ஆதரவு தெரிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அக்கட்சியின் வன்னி அரசு எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவுகளும் அதனை உறுதிப்படுத்துகிறது.

ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு இது திருமா காலம்-இனி உயர்வோம் மேலும் மேலும் எனவும் எம்மை- ஓரங்கட்ட நினைத்தாலும் ஒதுக்க நினைத்தாலும் நாங்களே மைய்யம் என்பதை தீர்மானிப்போம் எனவும் அடுத்தடுத்து பதிவிட்டுள்ளார்.

இதேபோல் விசிக நிர்வாகி சங்கத்தமிழன் என்பவரும், நல்ல தலைவர்கள்! நல்ல முடிவை எடுப்பார்கள்!! எங்கள் எழுச்சித் தமிழர் மிக நல்ல தலைவர்! நாடு நம்புகிறது! நாங்கள் நம்புகிறோம்!! நீங்களும் நம்புங்கள்! இன்றும் நமதே!! நாளையும் அமுதே! நாடும் எமதே!! குறிப்பு: CPI & CPM தலைவர்களின் நல்ல முடிவு! நல்ல தலைவர்களுக்கான ஆதாரம்! அச்சாரம்!! என்று குறிப்பிட்டுள்ளார்
