எச். வினோத் இயக்கத்தில், கே.வி.என் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் நடிப்பில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகி வெறும் மூன்று நாட்களில் உலகளவில் 171 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து மாபெரும் பாக்ஸ் ஆபீஸ் சாதனையைப் படைத்துள்ளது.

கடந்த ஜூலை 23 அன்று உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக வெளியான இத்திரைப்படம், முதல் நாளில் இருந்தே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. வார இறுதியில் வசூல் மேலும் அதிகரித்து, முதல் மூன்று நாட்களில் இந்திய அளவில் மட்டும் ₹108.34 கோடி மொத்த வசூலையும் (India Gross), வெளிநாடுகளில் ₹63.50 கோடி வசூலையும் ஈட்டியுள்ளது. இதன் மூலம் உலகளவில் படத்தின் மொத்த வசூல் ₹171.84 கோடியைத் தாண்டியுள்ளது.

தமிழகத்தில் மட்டும் மூன்று நாட்களில் ₹50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. மேலும் கர்நாடகா, கேரளா மற்றும் வட மாநிலங்களிலும் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறுகளில் திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளாகத் திரையிடப்பட்டு வருகிறது. அனிருத்தின் வெறித்தனமான பின்னணி இசை, பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு ஆகியோரின் பங்களிப்பு மற்றும் விஜய்யின் அதிரடியான நடிப்பு ஆகியவை குடும்பப் பார்வையாளர்களையும் கவர்ந்துள்ளது.

விஜய்யின் திரைப்பயணத்தின் இறுதிப் படமாக உருவெடுத்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், வரும் நாட்களில் மேலும் பல வசூல் சாதனைகளை முறியடிக்கும் எனத் திரைத்துறை வர்த்தகப் பகுப்பாய்வாளர்கள் கணித்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version