நாடு முழுவதும் 2வது நாளாக மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்திருப்பதால் மக்கள் அதிர்ச்சியடந்துள்ளனர்.

சட்டமன்ற தேர்தல் முடிந்த கையோடு, நாட்டில் பெட்ரோல், டீசல் விலை படிப்படியாக உயரத் தொடங்கியது. 2 வாரங்களில் 4 வது முறையாக பெட்ரோல் விலை அதிகரித்ததால், மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். அந்த வகையில் தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.0.24 காசுகள் உயர்ந்து ரூ.108.01க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.0.23 காசுகள் உயர்ந்து ரூ.99.78க்கு விற்பனையாகிறது.

மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றம் காரணமாகவும், ஹர்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருப்பதாலும், இந்த விலையேற்றம் அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டாலர்களை கடந்து விற்பனையாவதால், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொடர் விலை உயர்வால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் என மக்கள் கலக்கத்தில் உள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version