Close Menu
    What's Hot

    5 லட்சம் காலிப்பணியிடங்கள்: இளைஞர்களுக்கு உடனே வேலை வழங்க அன்புமணி வலியுறுத்தல்!

    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு அரிவாள் வெட்டு!. திமுக கவுன்சிலர் மகன் போலீசில் சரண்!

    குர்பானி தடை உத்தரவு விவகாரம்: தமிழக அரசு தலையிட எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»“‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டம் உலகின் மிகப்பெரிய காப்பீட்டு திட்டம்..” பிரதமர் மோடி புகழாரம்!
    இந்தியா

    “‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டம் உலகின் மிகப்பெரிய காப்பீட்டு திட்டம்..” பிரதமர் மோடி புகழாரம்!

    Editor TN TalksBy Editor TN TalksMay 20, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    modi 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்தியாவில் செயல்படுத்தப்படும் ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டம் உலகின் மிகப்பெரிய காப்பீட்டு திட்டமாகும் என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

    உலக சுகாதார நிறுவனத்தின் 78வது கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவின் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். இந்தியாவில் செயல்படுத்தப்படும் ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டம் உலகின் மிகப்பெரிய காப்பீட்டு திட்டமாகும் என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். இந்த திட்டத்தின் மூலம் 58 கோடி பேர் பயன் பெறுவதாகவும், தற்போது, இந்த திட்டத்தின் கீழ் 70 வயதுக்கும் மேற்பட்டவர்களையும் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

    ஆயிரக்கணக்கான சுகாதார மையங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக கூறிய பிரதமர் மோடி, அங்கு பரிசோதனை செய்வதுடன், புற்றுநோய், நீரிழிவு மற்றும் மன அழுத்தம் உள்ளிட்டவை ஆரம்பநிலையில் கண்டறியப்படுவதாக தெரிவித்தார். லட்சக்கணக்கான மக்களுக்கு டிஜிட்டல் சுகாதார அடையாளம் கிடைத்துள்ளதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, அதன் மூலம், ஒருங்கிணைந்த பலன்கள், காப்பீடு, ஆவணங்கள் மற்றும் தகவல்களை பெற முடிவதாகவும் குறிப்பிட்டார்.

    ஜூன் 11ல் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படவுள்ளதை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, இந்த ஆண்டு யோகா தின கொண்டாட்டத்தில் அனைத்து நாடுகளையும் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார். ஒரே பூமி ஒரே ஆரோக்கியத்திற்கான யோகா என்ற மையக்கருத்து அடிப்படையில் இந்தாண்டு சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

    இதையும் படிக்க: பொற்கோயிலில் அதிகரிக்கப்பட்ட வான்பாதுகாப்பு.. இந்திய ராணுவ அதிகாரிகள் தகவல்!!

    நாடு முழுவதும் உள்ள பொது மருந்தகங்கள், தரமான மருந்துகளை சந்தையை காட்டிலும் குறைந்த விலையில் விற்பனை செய்வதால், அத்தியாவசிய மருந்துகள் அனைவருக்கும் கிடைப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

    Ayushman Bharat Digital Health ID Free health insurance India Indian public health scheme Jan Aushadhi Kendras Modi WHO speech One Earth One Health Universal Health Coverage India WHO 78th meet ஆயுஷ்மான் பாரத் சர்வதேச யோகா தினம் 2025 நரேந்திர மோடி
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஹரிவராசனம் பாடலுடன் சாத்தப்பட்ட சபரிமலை.. மீண்டும் எப்போது திறக்கப்படும் தெரியுமா?
    Next Article தொடர் சரிவில் இந்திய பங்கு சந்தைகள்.. காரணம் என்ன?
    Editor TN Talks

    Related Posts

    கவனம்!. குர்குரே சாப்பிட்ட போது மூச்சுத்திணறல்!. இளைஞர் பரிதாப மரணம்!

    May 31, 2026

    500 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து!. சுற்றுலா பயணிகள் 8 பேர் பலி!

    May 31, 2026

    திரிணாமுல் காங்., எம்.பி. மீது தாக்குதல்!. மேற்கு வங்கத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் வன்முறை!

    May 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    5 லட்சம் காலிப்பணியிடங்கள்: இளைஞர்களுக்கு உடனே வேலை வழங்க அன்புமணி வலியுறுத்தல்!

    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு அரிவாள் வெட்டு!. திமுக கவுன்சிலர் மகன் போலீசில் சரண்!

    குர்பானி தடை உத்தரவு விவகாரம்: தமிழக அரசு தலையிட எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!

    சிவகங்கை அருகே புலி, வில், அம்பு சின்னங்களுடன் அரிய வகை கல்வெட்டு கண்டெடுப்பு!

    கவனம்!. குர்குரே சாப்பிட்ட போது மூச்சுத்திணறல்!. இளைஞர் பரிதாப மரணம்!

    Trending Posts

    சென்னை : மதுபான பாரில் தகராறு..! கார் ஏற்றி கொ** செய்யப்பட்ட இளம்பெண்..!

    May 31, 2026

    முப்படைகளின் தலைமை தளபதியானார் தமிழர் ராஜா சுப்ரமணி – அணிவகுப்பு மரியாதை ஏற்பு

    May 31, 2026

    சிவகங்கை அருகே புலி, வில், அம்பு சின்னங்களுடன் அரிய வகை கல்வெட்டு கண்டெடுப்பு!

    May 31, 2026

    கவனம்!. குர்குரே சாப்பிட்ட போது மூச்சுத்திணறல்!. இளைஞர் பரிதாப மரணம்!

    May 31, 2026

    500 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து!. சுற்றுலா பயணிகள் 8 பேர் பலி!

    May 31, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.