Close Menu
    What's Hot

    ஈரானில் கமேனியின் பிரம்மாண்ட இறுதிச்சடங்கு தொடங்கியது!. மகன் மொஜ்தபா பங்கேற்கவில்லை!

    தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று தொடக்கம்!. 9.30 மணிக்கு மேல் அனுமதி இல்லை!. 

    தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிரடி வேட்டை!. ரூ.57 லட்சம் பறிமுதல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தொடங்கியது!. மே மாதத்துக்கான நீரை கேட்கும் தமிழகம்!
    இந்தியா

    காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தொடங்கியது!. மே மாதத்துக்கான நீரை கேட்கும் தமிழகம்!

    Editor web3By Editor web3April 29, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Cauvery Management Authority meeting
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான காவிரி மேலாண்மை ஆணையத்தின் 50-வது கூட்டம், இன்று டெல்லியில் அதன் தலைவர் எஸ்.கே. ஹல்தார் தலைமையில் தொடங்கியது. தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், அணைகளின் நீர்மட்டம் 34 சதவீதமாகக் குறைந்துள்ள நிலையில் இக்கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய நான்கு மாநில அதிகாரிகளும் பங்கேற்றுள்ள இக்கூட்டத்தில், மே மாதத்திற்குத் தேவையான 2.5 டிஎம்சி தண்ணீரைத் திறந்துவிடுமாறு கர்நாடகாவிடம் தமிழக அரசு வலியுறுத்தத் திட்டமிட்டுள்ளது.

    கர்நாடக அரசு மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்பதில் பிடிவாதமாக உள்ள நிலையில், இன்றைய கூட்டத்தில் அது குறித்து விவாதிக்கவும் அந்த மாநில அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும், மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் கடுமையான எதிர்ப்பையும், கொள்கை முடிவுகளையும் நீர்வளத்துறை செயலாளர் ஜெயகாந்தன் காணொலி வாயிலாக இக்கூட்டத்தில் பதிவு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்டை மாநிலங்கள் தங்களுக்குத் தேவையான நீர் இருப்பு குறித்து விவாதிக்கும் அதே வேளையில், தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    மறுபுறம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் முடிந்து இன்னும் வாக்கு எண்ணிக்கை நடைபெறாத சூழலில், இக்கூட்டத்தை நடத்துவதற்கு அரசியல் கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தற்போது ‘காபந்து அரசு’ நடைமுறையில் உள்ளதால், இக்கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என சிபிஐ மற்றும் பாமக போன்ற கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. மாநிலத்தின் நலன் சார்ந்த முக்கிய முடிவுகளை எடுக்கும் முன்பாக மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகளைக் கேட்க வேண்டும் என்பதே இவர்களின் வாதமாக உள்ளது. பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பினாலும், டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசாதி, மதமற்றவர் என்பதை நடத்தை மூலம் காட்டவேண்டும்; பார்த்திபன் வழக்கில் உயர்நீதிமன்றம் அறிவுரை
    Next Article காங்கிரஸ் எம்.பி மீது சாலை ஆக்கிரமிப்பு புகார் – அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
    Editor web3
    • Website

    Related Posts

    ஈரானில் கமேனியின் பிரம்மாண்ட இறுதிச்சடங்கு தொடங்கியது!. மகன் மொஜ்தபா பங்கேற்கவில்லை!

    July 4, 2026

    தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று தொடக்கம்!. 9.30 மணிக்கு மேல் அனுமதி இல்லை!. 

    July 4, 2026

    தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிரடி வேட்டை!. ரூ.57 லட்சம் பறிமுதல்!

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஈரானில் கமேனியின் பிரம்மாண்ட இறுதிச்சடங்கு தொடங்கியது!. மகன் மொஜ்தபா பங்கேற்கவில்லை!

    தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று தொடக்கம்!. 9.30 மணிக்கு மேல் அனுமதி இல்லை!. 

    தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிரடி வேட்டை!. ரூ.57 லட்சம் பறிமுதல்!

    இங்கிலாந்து – இந்தியா 2வது டி20 போட்டி!. முதல் வெற்றி யாருக்கு?

    இறுதிவரை மிரட்டிய கேப் வெர்டே அணி!. கூடுதல் நேரத்தில் தப்பித்த அர்ஜென்டினா!. அடுத்த சுற்றுக்கு தகுதி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.