தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஏற்பாடுகள் பணியில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில், அரசு அதிகாரிகள் பணியிட மாற்றும், நேரில் ஆய்வு செய்வது உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறது, மேலும் தேர்தல் நியாயமாகவும், வெளிப்படையாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, தேர்தல் ஆணையம் விதிமுறைகளை அறிவித்துள்ளது.

இந்த 5 மாநிலங்களிலும் சட்டப் பேரவைத் தேர்​தல் தயார் நிலை குறித்து ஆய்வு செய்​யும் பணியை தேர்​தல் ஆணையம் தொடங்​கி​யுள்​ளது. அந்தவகையில், அசாம் மாநிலத்​தில் தலைமை தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார், தேர்​தல் ஆணை​யர்​கள் சாந்து மற்​றும் விவேக் ஜோஷி தலை​மையி​லான குழு இன்று முதல் பிப்.18ம் தேதி வரை பயணம் செய்​கிறது.

இவர்​கள் மாநில தேர்​தல் ஆணை​யர், தேர்​தல் அதி​காரி​கள், தலைமைச் செய​லா​ளர், டிஜிபி, மாவட்ட ஆட்​சி​யர்​கள், காவல் துறை அதி​காரி​கள், அரசி​யல் கட்​சி​யினர் ஆகியோரை சந்​தித்து ஆலோ​சனை நடத்​து​வர். இவர்​கள் தமிழகம் மற்​றும் புதுச்​சேரிக்கு இந்த மாதம் இறு​தி​யில் வரு​வர் எனத் தெரி​கிறது. மேற்​கு ​வங்​கம் மற்​றும் கேரளா​வில் இவர்​களது பயணம் இன்​னும் முடிவு செய்யப்பட​வில்​லை.

மேலும், தேர்தலையொட்டி தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் முன்னெடுத்து வருகிறது. இந்தநிலையில், நேற்றைய டி20 உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணிக்கு தேர்தல் ஆணையம் வாழ்த்து தெரிவித்துள்ளது. இதனையும் தனது பிரச்சார கருவியாக மாற்றிய தேர்தல் ஆணையம், ஒரு போட்டியில் ஒவ்வொரு ரன்னும் எப்படி முக்கியமோ, அதுபோல ஜனநாயத்தில் ஒவ்வொரு ஓட்டும் முக்கியம் என குறிப்பிட்டு படிவம் 6-ஐ நிரப்பி வாக்காளராக பதிவு செய்ய அறிவுறுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version