“அரசியல் விரக்தியில் உத்தவ் தாக்கரேயும், ராஜ் தாக்கரேயும் கூட்டணி அமைத்துள்ளனர்” என மகாராஷ்டிர முதல்வரும், பாஜக மூத்தத் தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் விமர்சித்தார்.

இதுகுறித்து மும்பையில செய்தியாளர்களிடம் பேசிய பட்னாவிஸ், “சிவசேனா (யுபிடி) மற்றும் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சிகள் தங்களின் இந்த ஒன்றிணைவு பற்றி செயற்கையாக ஒரு பரபரப்பை உருவாக்க முயற்சிக்கிறது. ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடப்பது போலவும், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் நேருக்கு நேர் அமர்ந்து பேசுவது போலவும் ஒரு பரபரப்பை உருவாக்க அவர்கள் முயற்சிக்கின்றனர். இந்த பரபரப்பு சிவசேனா (யுபிடி) மற்றும் எம்என்எஸ் ஆகிய இரு கட்சிகளாலும் வேண்டுமென்றே உருவாக்கப்படுகிறது.

சமாதானப்படுத்தும் அரசியலில் ஈடுபட்டு, இரு கட்சிகளும் தங்களைத் தாங்களே பலவீனப்படுத்திக் கொண்டன. சமாதானப்படுத்தும் அரசியலால் முக்கியத்துவத்தை இழந்த கட்சிகள் இவை. அவர்கள் ஒன்று சேர்வதால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. இந்தக் கூட்டணி சித்தாந்தத்தால் அல்லாமல், அரசியல் விரக்தியால் அமைக்கப்பட்டுள்ளது.

தங்கள் இருப்பைக் காப்பாற்றிக்கொள்ளும் ஒரு விரக்தியான முயற்சியில், தனியாக வெற்றிபெற முடியாது என அவர்கள் கைகோர்த்துள்ளனர். இருப்பினும், மகாராஷ்டிர மக்கள் எங்கள் அரசின் பணிகளைப் பார்த்திருக்கிறார்கள், அதன் அடிப்படையில்தான் மகாயுதி வெற்றி பெறும்” என்று கூறினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version