மேகாலயாவில் கிழக்கு ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள  சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில்  பெரும் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். சம்பவ இடத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தகவல்களின்படி,  பலியானவர்களில் பெரும்பாலோர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். நிலக்கரிச் சுரங்க விபத்தில் உயிரிழந்த 10 தொழிலாளர்களில் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பிஹாரா கிராமத்தைச் சேர்ந்த ஃபாரூக் அகமது, மற்றும் ஷரிஷா குரி கிராமத்தைச் சேர்ந்த தில்டார் ஹுசைன், அன்வரா ஹுசைன் ஆகியோர் ஆவர்.

இந்தச் சம்பவத்தை காவல்துறை கண்காணிப்பாளர் விகாஸ் குமார் உறுதிப்படுத்தினார். தாங்ஸ்கு பகுதியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாகவும், அங்கு நான்கு உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக அவர் கூறினார். பலத்த தீக்காயமடைந்த ஒருவர் சிகிச்சைக்காக சில்சாருக்கு அனுப்பப்பட்டுள்ளார்.  ஆனால் உள்ளே இருந்தவர்களின் எண்ணிக்கை உறுதிப்படுத்தப்படவில்லை. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version