ஒடிசாவின் சம்பல்பூர் மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் 187 காலிப் பணியிடங்கள் ஏற்பட்டன.
இதற்கான எழுத்துத் தேர்வு கடந்த 16-ம் தேதி சம்பல்பூரில் நடைபெற்றது. இதில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அவர்கள் அனைவரும் தேர்வு அறைக்கு பதிலாக விமான ஓடுதளத்தில் வரிசையாக அமர வைக்கப்பட்டிருந்தனர். தரையில் அமர்ந்தபடியே அனைவரும் தேர்வை எழுதி முடித்தனர்.
