Close Menu
    What's Hot

    நடிகர் ஜீவாவின் புதிய பட அப்டேட்!

    ‘எல்லாம் இனிதே’!- ‘சேயோன்’ புதிய புகைப்படம் வெளியீடு!

    கொளுத்தும் வெயில்: தமிழகத்தின் 7 இடங்களில் சதமடித்த வெப்பநிலை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»மனைவியின் மூக்கை கடித்து துப்பிய கணவர்… தகாத உறவால் நடந்த கோர சம்பவம்…
    இந்தியா

    மனைவியின் மூக்கை கடித்து துப்பிய கணவர்… தகாத உறவால் நடந்த கோர சம்பவம்…

    Editor TN TalksBy Editor TN TalksJune 20, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    11 9
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    உத்தரபிரதேசத்தில் மனைவி தகாத உறவில் இருந்ததால் ஆத்திரமடைந்த கணவர் மூக்கை கடித்து துப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள தியோரியா பிரசித்நகர் கிராமத்தை சேர்ந்தவர் கில்வான். விவசாயியான அவர், அரியானா மாநிலம் ஷாஹாபாத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    கில்வானின் மனைவி, அதேப் பகுதியை சேர்ந்த ஒருவருடன் பழகி வந்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக் காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தாக தெரிகிறது. இந்த விஷயம் கில்வானுக்கு தெரியவர, இது குறித்து மனைவியை கண்டித்துள்ளார். ஆயினும் அதனை கண்டுகொள்ளாத அவர், கள்ளக் காதலை வளர்த்து வந்துள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த அவர், மனைவியை தாக்கியதோடு, அவரது மூக்கை கடித்து துப்பிவிட்டு தப்பியோடியுள்ளார். வலியால் அப்பெண் கதறிய நிலையில், சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அப்பெண்ணை மீட்டு லக்னோவில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மூக்கை மீண்டும் இணைக்க அறுவை சிகிச்சை முயற்சிகள் நடைபெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தப்பியோடிய கில்வானை தேடி வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபாலியல் வழக்கில் பாதிக்கப்பட்டோரின் அடையாளங்களை வெளிப்படுத்தக் கூடாது… நீதிமன்றம் உத்தரவு…
    Next Article தேர்தல் பிரசாரத்தில் 4 நிமிடங்கள் அதிகமாக பேசிய திருமா… வழக்கை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு…
    Editor TN Talks

    Related Posts

    நீங்கள் சாப்பிடுவது ஐஸ்கிரீமா… ப்ரோசன் டெசர்டா? – வரிசைக் கட்டும் நோய்கள்… எச்சரிக்கும் நிபுணர்கள்!

    June 13, 2026

    மண்ணுக்குள் உறங்கும் இயக்குநர் பாரதிராஜா..!! குடும்பத்திற்கு கடிதம் எழுதிய பிரதமர் மோடி..!!

    June 13, 2026

    அசாம்: விமான விபத்தில் உயிரிழந்த வீரர்கள் யார் யார்..?? வெளியான விவரங்கள்..!!

    June 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நடிகர் ஜீவாவின் புதிய பட அப்டேட்!

    ‘எல்லாம் இனிதே’!- ‘சேயோன்’ புதிய புகைப்படம் வெளியீடு!

    கொளுத்தும் வெயில்: தமிழகத்தின் 7 இடங்களில் சதமடித்த வெப்பநிலை!

    தென்மாவட்ட ரயில் சேவைகளில் முக்கிய மாற்றம்! தெற்கு ரயில்வே அறிவிப்பு

    பிரான்ஸ் ‘லெ மான்ஸ்‘ ரேஸில் அஜித் அணி 13வது இடம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.