Close Menu
    What's Hot

    போதையில் காவலர் வெறிச்செயல்!. செவிலியர்களை மிரட்டி மருத்துவமனையை சூறையாடியதால் அதிர்ச்சி!

    வருமான வரித்துறை வழக்கு: செந்தில் பாலாஜியின் சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜர்!

    அறநிலையத் துறையில் சீரமைப்பு நடவடிக்கை.. சமயபுரம், வடபழனி கோயில் அதிகாரிகள் அதிரடி சஸ்பெண்ட்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»அணு ஆயுத கருத்து… இந்தியா- பாகிஸ்தான் விமர்சனம்…
    இந்தியா

    அணு ஆயுத கருத்து… இந்தியா- பாகிஸ்தான் விமர்சனம்…

    Editor TN TalksBy Editor TN TalksMay 15, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    nuclear weapons
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் சர்வதேச அணுசக்தி அமைப்பின் மேற்பார்வையின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.

    பாகிஸ்தானுடனான பதற்றம் நீடிக்கும் நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ராணுவ தளபதி உபேந்திர திவேதி ஆகியோர் பயணம் மேற்கொண்டனர். ஸ்ரீநகரில் ராணுவ வீரர்களை சந்தித்து அவர்களுடன் ராஜ்நாத் சிங் கலந்துரையாடினார். அப்போது, பயங்கரவாதிகளுக்கு எதிராக வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்க தலை வணங்குவதாக அவர் தெரிவித்தார்.

    இந்திய ராணுவ வீரர்களின் சேவைக்கு நாடே கடமைப்பட்டுள்ளது என்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் நாடே பெருமை கொள்வதாகவும் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார். இந்தியா தனது மக்களை பாதுகாப்பதுடன், எதிரி நாட்டுக்கு பதிலடி தருவதும் நிரூபணம் ஆகியுள்ளதாக பெருமிதம் தெரிவித்த அவர், முரட்டுத்தனமான நாட்டுக்கு அணு ஆயுதம் தேவையா? எனக் கேள்வி எழுப்பினார். பாகிஸ்தான் அணு ஆயுதம் வைத்திருப்பதை சர்வதேச அணு ஆயுத முகமை பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.

    இந்தநிலையில், பாகிஸ்தானின் அணு ஆயுதக் கிடங்கை சர்வதேச அணுசக்தி நிறுவனம் மேற்பார்வையிட வேண்டும் என்ற மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூற்றுக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டு வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஜ்நாத் சிங்கின் பேச்சு, உலகளாவிய அணுசக்தி கண்காணிப்பு அமைப்பின் ஆணை மற்றும் பொறுப்புகள் குறித்த முழுமையான அறியாமையின் பிரதிபலிப்பு எனக் கூறியுள்ளது. இந்த பொறுப்பற்ற கருத்துக்கள், இந்தியாவின் பாதுகாப்பின்மை மற்றும் விரக்தியை வெளிப்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளது.

    இதனிடையே, இந்தியாவுடனான சமீபத்திய ராணுவ மோதலின் போது பாகிஸ்தானில் உள்ள எந்தவொரு அணுசக்தி நிலையத்தில் இருந்தும் கதிர்வீச்சு கசிவு அல்லது வெளியீடு எதுவும் இல்லை என உலகளாவிய அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான IAEA தெரிவித்துள்ளது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தானின் அணுசக்தி நிலையங்கள் அமைந்துள்ள கிரானா மலைகளை இந்திய ராணுவம் தாக்கியதாக செய்திகள் வெளியானது. இதனை விமான நடவடிக்கைகளின் இயக்குநர் ஜெனரல் ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி மறுத்திருந்தார். இந்தநிலையில்தான் பாகிஸ்தான் அணுசக்தி நிலையங்களில் இருந்தும் கசிவில்லை என சர்வதேச அணுசக்தி அமைப்பின் அறிக்கை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    India Pakistan nuclear weapons South Asia nuclear conflict அணு போர் விமர்சனம்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகுஜராத் டைட்டன்ஸ்-ல் இருந்து பட்லர் விலகல்? அதிர்ச்சியில் ரசிகர்கள்…
    Next Article அரசியலமைப்பின் பாதுகாவலர் நீதிமன்றம் தான்
    Editor TN Talks

    Related Posts

    தர்மேந்திர பிரதான் பதவி விலகணும்..!! நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்..!!

    July 24, 2026

    வெள்ளத்தில் தத்தளிக்கும் குஜராத்..!! 1,200 பேர் மீட்பு.. 22 ஆயிரம் பேர் வெளியேற்றம்..!!

    July 24, 2026

    டெல்லி போராட்டம் கிளப்பிய அதிர்வலை..!! உயர் கல்வித்துறையில் முக்கிய மாற்றம்..!!

    July 24, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    போதையில் காவலர் வெறிச்செயல்!. செவிலியர்களை மிரட்டி மருத்துவமனையை சூறையாடியதால் அதிர்ச்சி!

    வருமான வரித்துறை வழக்கு: செந்தில் பாலாஜியின் சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜர்!

    அறநிலையத் துறையில் சீரமைப்பு நடவடிக்கை.. சமயபுரம், வடபழனி கோயில் அதிகாரிகள் அதிரடி சஸ்பெண்ட்!

    நீட் எதிர்ப்பு போராட்டம்!. லயோலா மாணவர்கள் உள்ளிருப்பு; சாஸ்திரி பவன் முன்பு மே 17 இயக்கம் முற்றுகை!

    எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கை!. தமிழகத்தில் 70,485 பேர் விண்ணப்பித்துள்ளனர்!. மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.