ஐதராபாத்திலிருந்து புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் ஏற்பட்ட கோளாறால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து ஐதராபாத்திற்கு நேற்று இரவு 7.55 மணியளவில் இண்டிகோ விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 50-க்கும் மேற்பட்டோர் பயணத்தினர். விமானம் நடுவானில் பறந்துக் கொண்டிருந்த போது, தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனை கண்டறிந்த விமானி, உடனே விமானத்தை மீண்டும் திருப்பதியில் தரையிறக்கினார். சுமார் 30 நிமிடங்களாக வானில் வட்டமடித்த விமானம், பிறகு திருப்பதி விமான நிலையத்தில் தரையிறங்கியது.
விமானம் தரையிறங்கியதுடன் அதில் இருந்த பயணிகள் அனைவரும் விமான நிலையம் அழைத்து செல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.