ஹெலிகாப்டர் மற்றும் விமான விபத்துகளில் உயிரிழந்த தலைவர்கள் குறித்த விவரங்களை தற்போது விரிவாக பார்க்கலாம்.

2026

மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மும்பையில் இருந்து பாராமதிக்கு சிறிய ரக தனி விமானத்தில் 4 பேருடன் பயணித்துள்ளார். பாராமதியில் தரையிறங்கும் போது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அஜித் பவார் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.

2025

குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட 10 நிமிடங்களில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதில், குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானியும் மரணமடைந்தார்.

2020

இந்தியாவின் முதல் முப்படைத் தளபதி பிபின் ராவத், தனது மனைவி மற்றும் 11 பேருடன் சென்ற எம்ஐ-17 ஹெலிகாப்டர், தமிழ்நாட்டின் குன்னூர் அருகே விபத்துக்குள்ளானதில் பிபின் ராவத் உள்பட அனைவரும் உயிரிழந்தனர்.

2011

அருணாச்சலப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் டோர்ஜி காண்டு, 2011ம் ஆண்டு மே 4ம் தேதி தவாங்கில் இருந்து இட்டா நகருக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டார். அப்போது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் டோர்ஜி காண்டு உயிரிழந்தார்.

2009

ஆந்திர முன்னாள் முதலமைச்சரும் ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தையுமான ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி, 2009ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

2005

தொழிலதிபரும், அரியானா மாநில அமைச்சராக இருந்த O.P ஜிண்டால், சகாரன்பூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.

2001

மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சருமான மாதவ்ராவ் சிந்தியா, உத்தரப்பிரதேச மாநிலத்தின் மெயின்புரி அருகே மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

1980

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் மகன் சஞ்சய் காந்தி, 1980ம் ஆண்டு நடைபெற்ற விமான விபத்தில் உயிரிழந்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version