Close Menu
    What's Hot

    இந்தியா- சுலோவாகியா இடையே 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

    கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை! தவெக பிரமுகர் கைது!

    விண்ணிலும் கடலிலும் இனி இந்தியா கெத்து… நிஜமாகும் பாதுகாப்பு அரண்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
    TN Talks
    Home»இந்தியா»ஆபரேசன் சிந்தூர் தொடர்கிறது… கடற்படை தளபதி பேச்சால் பரபரப்பு
    இந்தியா

    ஆபரேசன் சிந்தூர் தொடர்கிறது… கடற்படை தளபதி பேச்சால் பரபரப்பு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 1, 2025Updated:December 1, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    navy
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கை தொடர்வதாக கடற்படை தளபதி  தினேஷ் கே. திரிபாதி தெரிவித்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவத்திற்கு பதிலடியாக, பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத முகாம்களை அழிக்க ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையை இந்திய முப்படைகளும் மேற்கொண்டன. இதில் தீவிரவாத முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்டன. எனினும் பாகிஸ்தான் கெஞ்சியதை அடுத்து, அந்நடவடிக்கையை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தெரிவித்தது.

    இந்நிலையில், மகாராஸ்டிரா மாநிலம், புனேயில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியபோது, ஆபரேசன் சிந்தூர் குறித்து கடற்படை தளபதி  தினேஷ் கே. திரிபாதி பேசியதாவது:

    ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கை முழுவதும் நிறுத்தப்படவில்லை. அது இன்னும் தொடர்கிறது. ஆனால் எந்த வகையில் அது தொடர்கிறது என்ற தகவலை நான் பகிர முடியாது.

    இந்திய கடற்படைக்கு விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் தேவைப்படுகிறது. இதுகுறித்து நமது பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் பேசியுள்ளார். நமது கடற்படையில் உள்ள விக்ரமாதித்யா விமானந்தாங்கி போர்க் கப்பல் விரைவில் ஓய்வு பெறுகிறது. அதற்கு பதில் புதிய விமானந்தாங்கி கப்பல் இணைக்க வேண்டிய தேவை உள்ளது. இதேபோல், நமது கடற்படைக்கு மேலும் 2 விமானம் தாங்கி போர் கப்பல்கள் தேவைப்படுகின்றன.

    அடுத்த தலைமுறை ராணுவ அதிகாரிகளான உங்களை ஒழுக்கமானவர்களாகவும், உறுதியானவர்களாகவும், இந்தியாவின் அமைதி, பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை பாதுகாப்பவர்களாகவும் பார்க்கிறேன். போர் முறைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், தொழில்நுட்பம் எண்ணங்களின் வேகத்தை மாற்றுகிறது. எதிர்காலத்தில் தொழில்நுட்பம் நம்முடைய மிகப்பெரிய சொத்தாக இருக்கும்.

    நமது பிரதமர் நரேந்திர மோடி கூறியது போல, அமைதிக்கான பாதை சக்தியின் வழியாகவே செல்கிறது. இன்றைய அணிவகுப்பு இந்த கல்வி மையத்தின் முன்மாதிரியான தரத்தை மீண்டும் உறுதிப்படுத்துவதாக உள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜவுளிக்கடை பொம்மையை எரித்து ரூ.50 லட்சம் காப்பீடு பெற முயற்சி.. 4 பேர் கும்பல் கைது
    Next Article காங்கிரஸ் கூட்டத்தை மீண்டும் புறக்கணித்த சசிதரூர்
    Editor TN Talks

    Related Posts

    விண்ணிலும் கடலிலும் இனி இந்தியா கெத்து… நிஜமாகும் பாதுகாப்பு அரண்!

    June 15, 2026

    பாக்கை வீழ்த்திய இந்திய மகளிர் அணிக்கு  சச்சின், பிசிசிஐ செயலாளர் பாராட்டு

    June 15, 2026

    ஜார்கண்ட் டி20 கிரிக்கெட் லீக்: ஜாம்ஷெட்பூர் ஸ்டீலர்ஸ் வெற்றி

    June 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்தியா- சுலோவாகியா இடையே 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

    கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை! தவெக பிரமுகர் கைது!

    விண்ணிலும் கடலிலும் இனி இந்தியா கெத்து… நிஜமாகும் பாதுகாப்பு அரண்!

    பள்ளி வளாகங்களில் அரசியல், மத நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது என்ற உத்தரவை எதிர்த்த வழக்கு! தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

    வரும் 18ம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடர்: எம்.எல்.ஏ.க்களுக்கு புத்தாக்க பயிற்சி நாளை தொடக்கம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.