Close Menu
    What's Hot

    ”தவெக: மாற்றத்திற்கான தீர்ப்பும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சலான முடிவும்”

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    ”அந்த வேகத்தை மேகதாதுவில் காட்டலாமே…?” – விஜய்க்கு வானதி கேள்வி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»அடுத்த தீவிரவாத தாக்குதல்?. டெல்லி செங்கோட்டையில் குண்டுவெடிப்பு நடத்த திட்டம்!. நாடுமுழுவதும் உஷார் நிலை!
    இந்தியா

    அடுத்த தீவிரவாத தாக்குதல்?. டெல்லி செங்கோட்டையில் குண்டுவெடிப்பு நடத்த திட்டம்!. நாடுமுழுவதும் உஷார் நிலை!

    Editor web3By Editor web3February 21, 2026Updated:February 21, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    bomb blast warning Delhis Red Fort
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டெல்லி செங்கோட்டையில் குண்டுவெடிப்பு நடத்த லக்‌ஷர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    நாட்டின் தலைநகரான தில்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டை மற்றும் சாந்தினி சௌக் பகுதிகளில் குண்டுவெடிப்பு நடத்தப் பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுத்துறை இன்று அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த லக்‌ஷர்-இ-தொய்பா (LeT) பயங்கரவாத அமைப்பு இந்தச் சதியில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    கடந்த பிப்ரவரி 6-ம் தேதி பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் உள்ள மசூதி ஒன்றில் நடந்த குண்டுவெடிப்புக்குத் தகுந்த பதிலடி கொடுக்கவே, இந்தியாவில் இத்தாக்குதலை நடத்த லக்‌ஷர்-இ-தொய்பா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    செங்கோட்டைக்கு எதிரே உள்ள புகழ்பெற்ற வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாந்தினி சௌக் பகுதிகளைப் பயங்கரவாதிகள் குறிவைத்துள்ளனர். குறிப்பாக, ஐஇடி (IED) வெடிகுண்டுகளைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2025 நவம்பர் மாதம் 10ம் தேதி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து, தற்போது மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் டெல்லி முழுவதும் “ஹை அலர்ட்” விடுக்கப்பட்டுள்ளது. அந்த கார் குண்டுவெடிப்பில் 13 பேர் கொல்லப்பட்டனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

    தற்போது செங்கோட்டை, மெட்ரோ நிலையங்கள் மற்றும் முக்கிய சந்தைப் பகுதிகளில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு, சிசிடிவி கேமராக்கள் மூலம் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபுதுச்சேரியில் பாஜக – காங்கிரஸ் மோதல்!. பிரதமர் மோடியின் உருவ பொம்மை எரிப்பு!. பெரும் பதற்றம்!
    Next Article இந்தியா – பிரேசில் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து!. பிரதமர் மோடி புகழாரம்!.
    Editor web3
    • Website

    Related Posts

    ”தவெக: மாற்றத்திற்கான தீர்ப்பும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சலான முடிவும்”

    June 19, 2026

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    June 19, 2026

    ”அந்த வேகத்தை மேகதாதுவில் காட்டலாமே…?” – விஜய்க்கு வானதி கேள்வி

    June 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ”தவெக: மாற்றத்திற்கான தீர்ப்பும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சலான முடிவும்”

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    ”அந்த வேகத்தை மேகதாதுவில் காட்டலாமே…?” – விஜய்க்கு வானதி கேள்வி

    சாதித்த மாணவர்களுக்காக நேரில் வரப்போகும் முதல்வர் விஜய்..!! விரைவில் தவெக கல்வி விருது விழா..!!

    “மேகதாது தீர்மானத்திற்கெல்லாம் கர்நாடகா பணியாது” – துரைமுருகன் சொல்லும் மாற்று யோசனைகள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.