Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»4 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி
    இந்தியா

    4 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி

    Editor TN TalksBy Editor TN TalksNovember 8, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vnd
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    உத்தரப் பிரதேசத்தின் வாராணசியில் இருந்து 4 புதிய வந்தே பாரத் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

    காசி-கஜுராஹோ வந்தே பாரத், ஃபிரோஸ்பூர்-டெல்லி வந்தே பாரத், லக்னோ-சஹரன்பூர் வந்தே பாரத், எர்ணாகுளம்-பெங்களூரு வந்தே பாரத் ஆகிய நான்கு வந்தே பாரத் ரயில்கள் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டன. அப்போது, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். விழாவின்போது, வந்தே பாரத் ரயிலில் மாணவர்கள் மற்றும் சிறுவர்-சிறுமிர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

    பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “உலகெங்கிலும் வளர்ந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு உள்கட்டமைப்பு முக்கிய உந்து சக்தியாக இருந்து வருகிறது. இன்று இந்தியாவும் இந்த பாதையில் வேகமாக முன்னேறி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் புதிய வந்தே பாரத் ரயில்களின் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இன்று தொடங்கப்பட்டுள்ள இந்த நான்கு புதிய வந்தே பாரத் ரயில்களோடு, நாட்டில் 160க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    வந்தே பாரத், நமோ பாரத், அம்ரித் பாரத் போன்ற ரயில்கள் அடுத்த தலைமுறை இந்திய ரயில்வேக்கு அடித்தளம் அமைத்து வருகிறது. இது இந்திய ரயில்வையை மாற்றுவதற்கான ஒரு விரிவான முயற்சியாகும். வந்தே பாரத் என்பது இந்தியர்களுக்காக இந்தியர்களால் கட்டப்பட்ட ஒரு ரயில். இதற்காக ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்படுகிறார்கள்.

    பல நூற்றாண்டுகளாக நமது நாட்டில் புனித யாத்திரைகள் மக்களை இணைக்கும் கருவிகளாக இருந்து வருகின்றன. புனித யாத்திரை என்பது தெய்வீகத்துக்கான பாதை மட்டுமல்ல, இந்தியாவின் ஆன்மாவை இணைக்கும் ஒரு புனித பாரம்பரியமாகும். பிரயாக்ராஜ், அயோத்தி, ஹரித்துவார், சித்ரகூட், குருஷேத்ரா போன்ற எண்ணற்ற புனித யாத்திரைத் தலங்கள் நமது ஆன்மிக நீரோட்டத்தின் மையங்களாக உள்ளன. இந்த புனித இடங்கள் வந்தே பாரத் ரயில்களால் இணைக்கப்படும்போது அது இந்தியாவின் கலாச்சாரம், நம்பிக்கை மற்றும் வளர்ச்சியை இணைப்பதற்கான ஒரு வழியாகவும் உள்ளது. நமது நாட்டின் பாரம்பரிய நகரங்களை நாட்டின் வளர்ச்சியின் அடையாளங்களாக மாற்றுவதற்கான ஒரு முக்கிய படியாக வந்தே பாரத் ரயில்கள் உள்ளன.” என தெரிவித்தார்.

    vande bharat#p modi
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவரலாறு தெரியாத சிலர் மிரட்டிப் பார்க்கிறார்கள்: ஸ்டாலின்
    Next Article டிசம்பர் 1 முதல் 19 வரை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்!
    Editor TN Talks

    Related Posts

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    August 9, 2026

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    August 9, 2026

    புதுச்சேரி காவல் துறைக்குச் சிறப்பு சேர்த்த குடியரசுத் தலைவர் வண்ணக் கொடி விருது!. மத்திய அமைச்சர் அமித்ஷா வழங்கினார்!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.