Close Menu
    What's Hot

    விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து- பலி 23ஆக உயர்வு

    உஷார்!. தனிமையால் இதய நோய் ஏற்படும் அபாயம்!. ஆய்வில் அதிர்ச்சி!.

    இன்று ஹைதராபாத் அணிக்கு எதிராக தோனி விளையாடுவாரா?. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»புதுச்சேரி: டிரைவர்களின் திடீர் ஸ்டிரைக்கால் தொடங்கிய 10 நாட்களில் முடங்கிய மின்சார பஸ்கள்
    இந்தியா

    புதுச்சேரி: டிரைவர்களின் திடீர் ஸ்டிரைக்கால் தொடங்கிய 10 நாட்களில் முடங்கிய மின்சார பஸ்கள்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 7, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    pdu
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டிரைவர்களின் திடீர் ஸ்டிரைக்கால் தொடங்கிய பத்து நாட்களில் ரூ. 23 கோடிக்கு வாங்கிய மின்சார பஸ்கள் பணிமனையிலேயே நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    புதுவை அரசின் போக்குவரத்து கழகம் சார்பில் தனியார் பங்களிப்புடன் ரூ.23 கோடியில் 25 மின்சார பஸ்கள் இயக்கப்படுகின்றன. மின்சார பஸ்களை கடந்த 27ம் தேதி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அன்றைய தினமே அரசு போக்குவரத்து கழகத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கை இது எனக்கூறி நேரு எம்எல்ஏ தலைமையில் பொதுநல அமைப்புகள் கருப்பு கொடியுடன் போராட்டம் நடத்தின.

    இருப்பினும் தனியார் பங்களிப்புடன் மின்சார பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த மின்சார பஸ்களுக்கு புதுவை மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் 10 நாட்கள் மட்டுமே இயக்கப்பட்ட மின்சார பஸ்கள் இன்று முடங்கியுள்ளன. வழக்கமாக காலை 7 மணி முதல் இயக்கப்படும் பஸ்கள் இன்று இயக்கப்படவில்லை.

    அவை அனைத்தும் தாவரவியல் பூங்கா எதிரே உள்ள பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. சம்பள உயர்வு கோரி மின்சார பஸ் டிரைவர்கள் திடீர் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேசுகையில், “தங்களுக்கு சம்பளம் ரூ.21 ஆயிரம் வழங்குவதாக அறிவித்தாலும் பிடித்தம்போக ரூ.17 ஆயிரம் மட்டும்தான் கிடைக்கும். அதோடு தினப்படியும் வழங்குவதில்லை. இதனால் சம்பளத்தை ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளோம்” என்றனர்.

    நிர்வாக தரப்பில் ஓட்டுநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எனினும், பேச்சுவார்த்தை பலன்தரவில்லை. இதையடுத்து இன்று காலை முதல் மின்சார பஸ்கள் இயக்கப்படவில்லை. தொடங்கிய 10 நாட்களிலேயே மின்சார பஸ்கள் முடக்கி பணிமனையில் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பயணம் செய்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    puducherry#bus#strike
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழ்நாட்டில் வாக்குத் திருட்டு நடக்க விடக்கூடாது!- முதல்வர் ஸ்டாலின் பேச்சு
    Next Article ”பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியதற்கு வெட்கி தலைகுனிய வேண்டாமா?” – ஸ்டாலினுக்கு இபிஎஸ் கண்டனம்
    Editor TN Talks

    Related Posts

    இன்று இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு  உரையாற்றுகிறார் பிரதமர் மோடி!.

    April 18, 2026

    அரசின் தோல்வியாக கருதக்கூடாது!. மசோதா தோல்வி குறித்து கிரண் ரிஜிஜு விளக்கம்!

    April 18, 2026

    குட்நியூஸ்! அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு!. மத்திய அமைச்சரவை ஒப்புதல்!.

    April 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து- பலி 23ஆக உயர்வு

    உஷார்!. தனிமையால் இதய நோய் ஏற்படும் அபாயம்!. ஆய்வில் அதிர்ச்சி!.

    இன்று ஹைதராபாத் அணிக்கு எதிராக தோனி விளையாடுவாரா?. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

    “பவள விழா பாப்பா… உங்கள் ஆட்டம் முடிவுக்கு வரும்!”. தமிழக தேர்தல் நாடகம் குறித்து விஜய் கடிதம்!

    பெண்களுக்கு ஏற்பட்ட அநீதியை கொண்டாடுவதா?. எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!.

    Trending Posts

    விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து- பலி 23ஆக உயர்வு

    April 19, 2026

    உஷார்!. தனிமையால் இதய நோய் ஏற்படும் அபாயம்!. ஆய்வில் அதிர்ச்சி!.

    April 18, 2026

    இன்று ஹைதராபாத் அணிக்கு எதிராக தோனி விளையாடுவாரா?. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

    April 18, 2026

    “பவள விழா பாப்பா… உங்கள் ஆட்டம் முடிவுக்கு வரும்!”. தமிழக தேர்தல் நாடகம் குறித்து விஜய் கடிதம்!

    April 18, 2026

    பெண்களுக்கு ஏற்பட்ட அநீதியை கொண்டாடுவதா?. எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!.

    April 18, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.