Close Menu
    What's Hot

    கருங்கடல் தாக்குதல்கள்!. வணிக கப்பல்களில் பணிபுரியும் இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை!

    ஹர் கர் திரங்கா இயக்கம் – பிரதமர் அழைப்பை வெற்றி பெறச் செய்வோம் – நயினார் நாகேந்திரன்

    “தமிழ்த்தாய் வாழ்த்து தரைக்குத் தள்ளப்படுவதா?” – ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு வைரமுத்து கண்டனம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»மாணவர்கள் மீதான தாக்குதல்: “உத்தரவு கொடுத்தது யார்?” – அமித் ஷா விளக்கம் அளிக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்!
    இந்தியா

    மாணவர்கள் மீதான தாக்குதல்: “உத்தரவு கொடுத்தது யார்?” – அமித் ஷா விளக்கம் அளிக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்!

    Editor web2By Editor web2July 26, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Rahul Amit sha
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறை நடத்திய கண்மூடித்தனமான தாக்குதல் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் மூலம் விளக்கம் கோரியுள்ளார்.

    அமித் ஷாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், மாணவர்கள் நியாயமான மற்றும் பொறுப்புணர்வுள்ள கல்வி முறையை வலியுறுத்தி அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவர்களின் கோரிக்கைகளுக்கு பதிலளிப்பதற்கு பதிலாக, பாதுகாப்புப் படையினர் அதிகப்படியான பலத்தை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

    போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகள், உயிருக்கு ஆபத்தான ஆயுதங்கள் மற்றும் பெல்லட் கன் பயன்படுத்தப்பட்டதாகவும், இதில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். குறிப்பாக, பெண் மாணவிகள் மீதும் காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதாகவும், அவர்களை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

    மேலும், சமூக ஊடகங்களில் வெளியான தகவல்கள் மற்றும் ஊடகச் செய்திகளை மேற்கோள்காட்டிய ராகுல் காந்தி, 19 வயதான மாணவர் சாஹில் லோச்சப் என்பவரை நேரில் சந்தித்ததாகவும், பெல்லட் கன் தாக்குதலால் அவர் ஒரு கண்ணின் பார்வையை இழக்கும் அபாயத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். போராட்டத்தை ஒடுக்க உயிருக்கு ஆபத்தான ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது மிகவும் அதிர்ச்சியளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த விவகாரம் தொடர்பாக அமித் ஷாவிடம் இரண்டு முக்கிய கேள்விகளையும் ராகுல் காந்தி முன்வைத்துள்ளார். மாணவர்கள் மீது பெல்லட் கன் உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தான ஆயுதங்களை பயன்படுத்த அனுமதி அளித்தது உள்துறை அமைச்சரா? இல்லையெனில், அந்த உத்தரவை பிறப்பித்தது யார்? என்ற கேள்வியை அவர் எழுப்பியுள்ளார்.

    அதேபோல், சீருடை அணியாமல் கையில் லத்தியுடன் மாணவர்களை தாக்கியதாகக் கூறப்படும் நபர்கள் காவல்துறையினரா அல்லது வேறு யாரா? அவர்களை பணியில் ஈடுபடுத்திய அதிகாரம் யாருக்கு உள்ளது என்பதற்கும் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

    இந்த கடிதத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் இதுவரை அதிகாரப்பூர்வ பதில் எதையும் வெளியிடவில்லை.

    amitshah NEETProtest DelhiProtests rahulgandhi
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇருமுறை நிராகரிக்கப்பட்ட தர்மேந்திர பிரதானின் ராஜினாமா… பின்னணி தகவல்கள்
    Next Article “தமிழ்த்தாய் வாழ்த்து தரைக்குத் தள்ளப்படுவதா?” – ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு வைரமுத்து கண்டனம்
    Editor web2
    • Website

    Related Posts

    கருங்கடல் தாக்குதல்கள்!. வணிக கப்பல்களில் பணிபுரியும் இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை!

    July 26, 2026

    ஹர் கர் திரங்கா இயக்கம் – பிரதமர் அழைப்பை வெற்றி பெறச் செய்வோம் – நயினார் நாகேந்திரன்

    July 26, 2026

    “தமிழ்த்தாய் வாழ்த்து தரைக்குத் தள்ளப்படுவதா?” – ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு வைரமுத்து கண்டனம்

    July 26, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கருங்கடல் தாக்குதல்கள்!. வணிக கப்பல்களில் பணிபுரியும் இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை!

    ஹர் கர் திரங்கா இயக்கம் – பிரதமர் அழைப்பை வெற்றி பெறச் செய்வோம் – நயினார் நாகேந்திரன்

    “தமிழ்த்தாய் வாழ்த்து தரைக்குத் தள்ளப்படுவதா?” – ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு வைரமுத்து கண்டனம்

    மாணவர்கள் மீதான தாக்குதல்: “உத்தரவு கொடுத்தது யார்?” – அமித் ஷா விளக்கம் அளிக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்!

    இருமுறை நிராகரிக்கப்பட்ட தர்மேந்திர பிரதானின் ராஜினாமா… பின்னணி தகவல்கள்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.