Close Menu
    What's Hot

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»சேட்டிலைட் மூலம் பாக். பயங்கரவாதிகள் கண்காணிப்பு? செலவு இவ்வளவு கோடியா?
    இந்தியா

    சேட்டிலைட் மூலம் பாக். பயங்கரவாதிகள் கண்காணிப்பு? செலவு இவ்வளவு கோடியா?

    Editor TN TalksBy Editor TN TalksMay 12, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    sindoor
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

     

    இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் குறைந்தாலும் கூட, போர் இன்னும் முற்றிலும் நிறுத்தப்படவில்லை. பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக இந்தியா பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து பாகிஸ்தான் இந்தியாவின் எல்லைக் கோடு அருகேயுள்ள பகுதிகள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தி வந்தது. அதனை இந்திய ராணுவம் முறியடித்தது. இருநாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் இருந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் இருநாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.

    அதன்படிப்படையில் இரு நாடுகளும் போரை நிறுத்துவதாக ஒப்புக் கொண்டதாக டிரம்ப் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்திய ராணுவ அதிகாரியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தாக்குதலை நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டு, கடந்த 10-ம் தேதி மாலை 5 மணி முதல் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டன. ஆனால் சில மணி நேரத்தில் பாகிஸ்தான் ராணுவம் மீண்உம் அடாவடியாக டிரோன்களை ஏவி தாக்குதலை தொடர்ந்தது. அதற்கு இந்தியா தரப்பில் தக்க பதிலடியும் கொடுக்கப்பட்டு, பின் எல்லையில் அமைதி திரும்பியது.

    4 நாட்களாக தொடர்ந்த தாக்குதல் ஓய்ந்ததால், காஷ்மீர் உள்ளிட்ட எல்லையோர பகுதிகள் நேற்று முதல் (11.05.2025) இயல்பு நிலைக்கு திரும்பியது. மின்விநியோகம் மீண்டும் வழங்கப்பட்ட நிலையில், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் திறக்கப்பட்டன. வாகன போக்குவரத்தும் வழக்கம் போல் நடைபெற தொடங்கியுள்ளது. இருப்பினும் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையேயான சுமூக பேச்சுவார்த்தையாக பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை இயக்குநர்கள் இடையே இன்று (12.05.2025) பேச்சுவார்த்தை நடக்கிறது.

    முன்னதாக பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ராணுவம் பீரங்கிகள், டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலையும் நடத்திய போது, அதனை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது. இந்திய தாக்குதலால் நிலைகுலைந்து போன பாகிஸ்தான், தாக்குதலை நிறுத்துமாறு சமரச பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில், பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடம் குறித்து சேகரிக்கப்பட்ட உளவுத் துறை தகவலின் அடிப்படையில் ”ஆபரேஷன் சிந்தூர்” வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. இதனால் உளவுத்துறை சேகரிக்கும் சக்தியை மேலும் வலுப்படுத்த ஒரு பெரிய திட்டத்தை இந்திய அரசு வகுத்துள்ளது. இதற்கென இந்திய அரசு அதன் உளவு செயற்கைக் கோள் அமைப்பை வலுப்படுத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக சுமார் 3 பில்லியன் டாலர்கள் அதாவது ரூ.22,500 கோடி செலவாகும் எனவும், இது விண்வெளி அடிப்படையிலான கண்காணிப்பு திட்டம் என்று அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபரில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு இந்தத் திட்டத்திற்கு அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    India operation sindoor india pakistan conflict India Pakistan War
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅடுத்த ஹிட்டுக்கு தயாராகும் பிரதீப் ரங்கநாதன்… புதுப்பட ரிலீஸ் தேதி அறிவிப்பு…
    Next Article பற்றி எரிந்த சென்னை தி.நகர்… துணிக்கடையில் ஏற்பட்ட விபத்து…
    Editor TN Talks

    Related Posts

    யார் இந்த AjayRastogi ?

    October 13, 2025

    கரூர் சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு எதிரான மனுவில் இன்று விசாரணை

    October 10, 2025

    அந்தரங்க வீடியோக்களை டெலிட் செய்ய நடவடிக்கை – மத்திய அரசு

    October 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    Trending Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    October 14, 2025

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    October 13, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.