Close Menu
    What's Hot

    டெல்லி தேவாலயத்தில் மோடி பிரார்த்தனை! கிறிஸ்துமஸை முன்னிட்டு வழிபாடு

    தவெக கூட்டணியில் டிடிவி, ஓபிஎஸ்? செங்கோட்டையன் சொன்ன பதில்

    ஒரு பவுன் தங்கம் : இன்றைய நிலவரம் என்ன?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»கடல் உணவு ஏற்றுமதி: அமெரிக்காவின் புதிய வரி விதிப்பால் கடும் பாதிப்பு!
    இந்தியா

    கடல் உணவு ஏற்றுமதி: அமெரிக்காவின் புதிய வரி விதிப்பால் கடும் பாதிப்பு!

    Editor TN TalksBy Editor TN TalksSeptember 3, 2025Updated:September 3, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    prawn
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தூத்துக்குடியில் இருந்து அமெரிக்காவுக்கு இறால் மற்றும் பிற கடல் உணவுகள் ஏற்றுமதி செய்வது, அமெரிக்காவின் புதிய 50% வரி விதிப்பால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பு இந்தியப் பொருட்களின் ஏற்றுமதிக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.

    இந்தியாவிலிருந்து சுமார் ரூ.23,000 கோடிக்கு கடல் உணவுகள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதில் ஆந்திரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. இந்த வரி விதிப்பின் காரணமாக, தமிழகத்திலிருந்து அமெரிக்காவுக்கான இறால் ஏற்றுமதி முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.

    ஏற்றுமதியாளர்கள், ஒரு கண்டெய்னரில் 3% முதல் 4% வரை மட்டுமே லாபம் கிடைப்பதாகவும், புதிய வரி விதிப்பால் லாபத்தை விட வரி அதிகமாக இருப்பதால் ஏற்றுமதியை நிறுத்திவிட்டதாகவும் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே அனுப்பப்பட்ட கண்டெய்னர்களை அமெரிக்க வியாபாரிகள் ஏற்க மறுத்துவிட்டதால், அவை அமெரிக்காவை சென்றடைய 15 நாட்கள் ஆகும் வரை வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    ஒருவேளை கண்டெய்னர்கள் ஏற்கப்படாவிட்டால், அவை மீண்டும் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்படும். அல்லது வேறு நாடுகளுக்கு அனுப்பவேண்டுமென்றால், அவற்றை மீண்டும் பேக்கிங் செய்ய அதிக செலவு ஏற்படும்.

    இதையும் படிக்க: சென்னையில் வெடித்த வன்முறை – தடியடி நடத்திய போலீசாரால் பரபரப்பு

    தற்போது மற்ற நாடுகளுக்கு இறால், கணவாய், நண்டு, ஆக்டோபஸ் போன்ற கடல் உணவுகள் ஏற்றுமதி செய்யப்படுவதால், நிறுவனங்களில் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆனால் இதே நிலை நீடித்தால், உற்பத்தி குறைந்து தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும் என்று ஏற்றுமதியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்தத் தொழில் முற்றிலும் மனிதவளத்தை நம்பி இருப்பதால், இப்போதைய நிலை தொடர்ந்தால் பெரும் நெருக்கடி ஏற்படும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

    அமெரிக்கா இறால் ஏற்றுமதி பாதிப்பு கடல் உணவு ஏற்றுமதி கப்பல்கள் சரக்குக் தமிழக ஏற்றுமதி தூத்துக்குடி தொழிலாளர் வேலைவாய்ப்பு புதிய வரி விதிப்பு பொருளாதார பாதிப்பு மீன்வளம் வர்த்தக உறவுகள் வர்த்தக போர் வியாபாரம்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article”சமூக நீதி எனும் பெருநெருப்பு அணையாது” – வெளியான வீடியோ
    Next Article திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில்: உண்டியல் காணிக்கை ரூ.6 கோடி வசூல்!
    Editor TN Talks

    Related Posts

    டெல்லி தேவாலயத்தில் மோடி பிரார்த்தனை! கிறிஸ்துமஸை முன்னிட்டு வழிபாடு

    December 25, 2025

    புதுச்சேரியில் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து 3 மாணவர்கள் தப்பியோட்டம்

    December 25, 2025

    கர்நாடகாவில் ஆம்னி பேருந்து மீது லாரி மோதி விபத்து: தீயில் கருகி 11 பேர் உயிரிழப்பு

    December 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டெல்லி தேவாலயத்தில் மோடி பிரார்த்தனை! கிறிஸ்துமஸை முன்னிட்டு வழிபாடு

    தவெக கூட்டணியில் டிடிவி, ஓபிஎஸ்? செங்கோட்டையன் சொன்ன பதில்

    ஒரு பவுன் தங்கம் : இன்றைய நிலவரம் என்ன?

    அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 30 இந்தியர் கைது

    கிரிக்கெட்டில் நான் ஒரு ‘ஆப் ஸ்பின்னர்’ – முதல்வர் ஸ்டாலின் கலகல பேச்சு

    Trending Posts

    மும்பையில் டிஜிட்டல் அரெஸ்ட்- ரூ.9 கோடியை இழந்து தவிக்கும் 85 வயது முதியவர்

    December 25, 2025

    தேசிய சீனியர் பாட்மிண்டன்: உன்னதி, தன்வி முன்னேற்றம்

    December 25, 2025

    கிரிக்கெட்டில் நான் ஒரு ‘ஆப் ஸ்பின்னர்’ – முதல்வர் ஸ்டாலின் கலகல பேச்சு

    December 25, 2025

    புதுச்சேரியில் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து 3 மாணவர்கள் தப்பியோட்டம்

    December 25, 2025

    இஷான் கிஷனின் சாதனை சதம் வீண்: 413 ரன்களை வெற்றிகரமாக துரத்தியது கர்நாடகா அணி

    December 25, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.