டெல்லி மெட்ரோவில் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் புதிய வழித்தடங்களை அமைக்க அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு, பல திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, டெல்லி மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சுமார் 16 கிலோ மீட்டர் துரத்திற்கு டெல்லி மெட்ரோவில் புதிய வழித்தடங்கள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மொத்தமாக 13 ரயில் நிலையங்கள் அமைய உள்ளன. இந்த திட்டத்திற்கு ரூ.12,015 கோடி மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புதிய மெட்ரோ வழித்தடத்தை அடுத்த 3 ஆண்டுகளுக்குள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் காற்று மாசு பிரச்சனை தீவிரமாகி வரும் சூழலில், மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டம் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, மோட்டார் வாகனங்களால் ஏற்படும் மாசுபாட்டை குறைக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version