பஹல்காம் தீவிரவாதை தாக்கதலை தொடர்ந்து நடத்தப்பட்ட’ஆபரேஷன் சிந்து நடவடிக்கை குறித்து மிக முக்கியமான கருத்தை வெளியிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்த நடவடிக்கை எந்தவொரு கட்டாயத்தினாலோ அல்லது பலவீனத்தினாலோ நிறுத்தப்படவில்லை, மாறாக இந்தியாவின் சொந்த முடிவின்படியே 72 மணி நேரத்தில் முடிக்கப்பட்டது என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எங்களது திறமை குறைந்துவிட்டதால் இந்த நடவடிக்கையை நாங்கள் நிறுத்தவில்லை. இது ஒரு முழுமையான திட்டத்தின் ஒரு பகுதி. தேவைப்பட்டால், நீண்ட காலப் போரை எதிர்கொள்ள இந்தியா முழுமையாகத் தயாராக இருந்தது. நாங்கள் எங்களது சொந்த விருப்பத்தின் பேரில் மட்டுமே இதை நிறுத்தினோம்,” என்று கூறினார்.
இந்தியாவின் ‘சர்ஜ் கெபாசிட்டி’ (Surge Capacity) எனப்படும், தேவைப்படும் நேரத்தில் ராணுவ பலத்தை திடீரென அதிகரிக்கும் திறன் முன்பை விட இப்போது பல மடங்கு வலுவாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஆபரேஷன் சிந்து என்பது இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய முப்படைகளுக்கு இடையே இருந்த சிறந்த ஒருங்கிணைப்பிற்கு ஒரு சிறந்த உதாரணம் என்று அவர் பாராட்டினார். “இந்திய ராணுவ சக்தி இனி தனித்தனியாக இயங்காது, மாறாக ஒருங்கிணைந்த முறையில் செயல்படும் என்பதை இது நிரூபித்துள்ளது. இது இந்தியாவின் புதிய ராணுவ சிந்தனையின் பிரதிபலிப்பாகும்,” என்றார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா தெளிவான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. பஹல்காம் சம்பவத்திற்குப் பிறகு நடத்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்டிரைக், வான்வழித் தாக்குதல்கள் மற்றும் ஆபரேஷன் சிந்து ஆகியவை இந்தியாவின் உறுதியான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும். பயங்கரவாதச் செயல்கள் எக்காரணம் கொண்டும் பொறுத்துக்கொள்ளப்படாது என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
இந்த நடவடிக்கையில், பிரம்மோஸ் போன்ற அதிநவீன ஏவுகணை அமைப்புகளும், கண்காணிப்புத் தளங்களில் செயற்கை நுண்ணறிவும் பயன்படுத்தப்பட்டு, துல்லியமும் அழிக்கும் திறனும் “அடுத்த கட்டத்திற்கு” கொண்டு செல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சர் விளக்கினார். மேலும் அவர், ” சிந்தூர் நடவடிக்கை 72 மணி நேரத்தில் நிறைவடைந்திருக்கலாம், ஆனால் அதற்கான தயாரிப்புகள் நீண்ட காலமாக நடைபெற்று வந்தன” என்று கூறினார். இதில் இராணுவ ஆயுத சேமிப்புத் திறன், உள்நாட்டு ஆயுதங்களின் நம்பகத்தன்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவை அடங்கும்.
இன்று உலகில் இந்தியாவின் அடையாளம் பொருளாதார அல்லது ராஜதந்திர அடிப்படையில் மட்டுமல்லாமல், இராணுவ வலிமை மற்றும் தடுப்பு சக்தியின் அடிப்படையிலும் கட்டமைக்கப்பட்டு வருகிறது என்று ராஜ்நாத் சிங் கூறினார். எந்த வடிவத்திலும் பயங்கரவாதத்தை நியாயப்படுத்துவது ஆபத்தானது என்றும், அது அமைதி மற்றும் வளர்ச்சிக்கு ஒரு பெரிய சவாலாக அமைகிறது என்றும் அவர் எச்சரித்தார். இந்த நடவடிக்கைக்குப் பிறகு இந்தியப் பாதுகாப்புப் பொருட்களுக்கான உலகளாவிய தேவையும் அதிகரித்துள்ளது. 2025-26 நிதியாண்டில் இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி ரூ.38,424 கோடியை எட்டியுள்ளது என்றும், இது முந்தைய ஆண்டை விட 62.66% அதிகரிப்பு என்றும் அவர் தெரிவித்தார்.
