Close Menu
    What's Hot

    நூற்றாண்டின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர் இவர்தான்!. டாப்பில் இடம்பிடித்த இந்திய ஜாம்பவான்கள்!

    திருவள்ளுவருக்கு காவி உடை – ஆளுநர் அர்லேகருக்கு அமைச்சர் வன்னியரசு கண்டனம்

    தீபாவளிக்கு ‘சூர்யா 47’ ரிலீஸ்?.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»உலகம்»நேபாள கலவரம்: 19 பேர் பலி; வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் தடை குறித்து அரசு முக்கிய முடிவு…
    உலகம்

    நேபாள கலவரம்: 19 பேர் பலி; வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் தடை குறித்து அரசு முக்கிய முடிவு…

    Editor TN TalksBy Editor TN TalksSeptember 9, 2025Updated:September 9, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Nepal Protest
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 19 பேர் மரணமடைந்ததை அடுத்து, வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு விதித்த தடையை அரசு திரும்பப் பெற்றுள்ளது.

    நேபாளத்தில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக வலைத்தளங்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது. முறைகேடுகளை தடுக்கவும், தேவையற்ற உள்ளீடுகளை தடுப்பதற்காகவும் புதிய விதிமுறைகளை அரசாங்கம் அமல்படுத்தியது. மேலும், பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் மீண்டும் புதுப்பித்துக் கொள்ள 7 நாட்கள் அவகாசம் வழங்கியது.

    இதனை எதிர்த்து ‘ஜென் எக்ஸ்’ (Zen X) 1995 முதல் 2000ஆம் ஆண்டிற்குள் பிறந்த இளைஞர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த எதிர்ப்பு போராட்டங்களின் அலை காத்மாண்டுவிற்கு அப்பாலும் பரவியுள்ளது. மேலும் போக்காரா, புட்வால், சித்வான், நேபாள்கஞ்ச் மற்றும் பிராட்நகர் ஆகிய நகரங்களுக்கு பரவியது.

    போராட்டத்தின் ஒரு வடிவமாக, இளைஞர்கள் தலைநகர் காட்மாண்டுவில் உள்ள நாடாளுமன்ற வளாகத்திற்குள் புகுந்தனர். தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்ற கட்டடத்தின் 2ஆவது நுழைவு வாயில் அருகே தீ வைத்தனர். இதனையடுத்து, தீப்பிழம்புகள் விரைவாக அப்பகுதி எங்கும் பரவின. இதனால், பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் இல்லத்திற்கு வெளியே இராணுவம் நிறுத்தப்பட்டது.

    போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைத்து அதன் சில பகுதிகளை சேதப்படுத்தியதை அடுத்து, நேபாள அரசாங்கம் கண்டதும் சுட உத்தரவு பிறப்பித்தது. இளம் போராட்டக்காரர்களை விரட்ட நேபாள போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் ரப்பர் தோட்டாக்களைப் பயன்படுத்தினர்.

    ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க தண்ணீர் பீரங்கிகள், தடியடிகள் மற்றும் ரப்பர் தோட்டாக்களைப் பயன்படுத்துமாறு போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    போராட்டம் வன்முறையாக மாறியதில் குறைந்தது 19 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், 300க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டதால் நாட்டில் அமைதியின்மை நிலவுகிறது.

    நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து தலைநகரில் நேபாள இராணுவம் நிறுத்தப்பட்டது. நியூ பனேஷ்வரில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றியுள்ள சாலைகளை இராணுவ வீரர்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.

    நேபாள அரசாங்கம் நாட்டில் சமூக ஊடக தளங்களைத் தடை செய்வதற்கான முந்தைய முடிவை வாபஸ் பெற்றதாக அறிவித்துள்ளது. மேலும், உள்துறை அமைச்சர் ரமேஷ் லெகாக், கடும் மோதல்களைத் தொடர்ந்து தார்மீக அடிப்படையில் ராஜினாமா செய்ததாக நேபாள காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

    Ban death Nepal protest Shooting social media Withdraw சமூக வலைத்தளங்கள் தடை துப்பாக்கிச் சூடு நேபாளம் போராட்டம் மரணம் வாபஸ்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவெளிநாட்டில் இருந்து வந்ததும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை
    Next Article புஸ்ஸி ஆனந்த் மீது வழக்கு போட்டதற்கு விஜய் கண்டனம்
    Editor TN Talks

    Related Posts

    நூற்றாண்டின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர் இவர்தான்!. டாப்பில் இடம்பிடித்த இந்திய ஜாம்பவான்கள்!

    May 31, 2026

    திருவள்ளுவருக்கு காவி உடை – ஆளுநர் அர்லேகருக்கு அமைச்சர் வன்னியரசு கண்டனம்

    May 31, 2026

    தீபாவளிக்கு ‘சூர்யா 47’ ரிலீஸ்?.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

    May 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நூற்றாண்டின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர் இவர்தான்!. டாப்பில் இடம்பிடித்த இந்திய ஜாம்பவான்கள்!

    திருவள்ளுவருக்கு காவி உடை – ஆளுநர் அர்லேகருக்கு அமைச்சர் வன்னியரசு கண்டனம்

    தீபாவளிக்கு ‘சூர்யா 47’ ரிலீஸ்?.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

    முப்படைகளின் தலைமை தளபதியானார் தமிழர் ராஜா சுப்ரமணி – அணிவகுப்பு மரியாதை ஏற்பு

    வன்முறையாக மாறிய சாம்பியன்ஸ் லீக் கொண்டாட்டம்!. கலவர பூமியான பாரிஸ்!.

    Trending Posts

    சென்னை : மதுபான பாரில் தகராறு..! கார் ஏற்றி கொ** செய்யப்பட்ட இளம்பெண்..!

    May 31, 2026

    முப்படைகளின் தலைமை தளபதியானார் தமிழர் ராஜா சுப்ரமணி – அணிவகுப்பு மரியாதை ஏற்பு

    May 31, 2026

    T20-ல் சரித்திரம் படைத்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்!.

    May 31, 2026

    நூற்றாண்டின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர் இவர்தான்!. டாப்பில் இடம்பிடித்த இந்திய ஜாம்பவான்கள்!

    May 31, 2026

    திருவள்ளுவருக்கு காவி உடை – ஆளுநர் அர்லேகருக்கு அமைச்சர் வன்னியரசு கண்டனம்

    May 31, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.