Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»LIFESTYLE»ரத்த உற்பத்தியை கடகடவென உயர்த்தும் சுவரொட்டி! இத்தனை முறை சாப்பிட்டால் அனீமியா தொல்லை நீங்கும்!
    LIFESTYLE

    ரத்த உற்பத்தியை கடகடவென உயர்த்தும் சுவரொட்டி! இத்தனை முறை சாப்பிட்டால் அனீமியா தொல்லை நீங்கும்!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 19, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    suvarr
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ‘சுவரொட்டி’ என்ற வார்த்தையை கேட்டால், பலருக்கும் சுவரில் ஒட்டப்படும் விளம்பரத் தாள் தான் நினைவுக்கு வரும். ஆனால், இது ஆட்டு மண்ணீரலை குறிக்கும் என்பது பலருக்கும் தெரியாது. பச்சையாக இருக்கும்போது சுவரில் ஒட்டிக் கொள்ளும் தன்மை கொண்டிருப்பதாலேயே இதற்கு இந்த பெயர் வந்திருக்கலாம். இது மனித உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்களை அள்ளிக் கொடுக்கும் உணவாக இருக்கிறது.

    குறிப்பாக, ரத்த சோகை (Anemia) என்னும் இரும்புச்சத்து குறைபாட்டால் அவதிப்படுபவர்களுக்கும், தங்கள் உடலில் ரத்தம் மற்றும் ஊட்டச்சத்து தேவைகள் அதிகரிக்கும் கர்ப்பிணிகளுக்கும் சுவரொட்டி ஒரு வரப்பிரசாதமாகும். நமது ஊர்களில் சுவரொட்டிக்கு மவுசு அதிகம்.

    மட்டன் கடைகளில் ஃப்ரீ ஆர்டர் செய்தால் தான் இதனை சாப்பிட முடியும் என்ற அளவிற்கு டிமாண்ட் அதிகமாக உள்ளது. “உடலில் ரத்தத்தை கடகடவென உயர்த்தும் தன்மை கொண்டது” என்று மருத்துவர்களே பரிந்துரைக்கும் அளவிற்கு மக்கத்துவம் கொண்டது என்பது தான் இதன் மவுசுக்கு காரணம்.

    சுவரொட்டி, ஆட்டின் ஒரு சிறிய பகுதியாக இருந்தாலும், அது வழங்கும் ஊட்டச்சத்துக்கள் மிக அதிகம். இது ஒரு இரும்புச்சத்தின் பொக்கிஷம் என்றே சொல்லலாம். 100 கிராம் சுவரொட்டி, ஒரு மனிதனின் பல நாட்களுக்கான இரும்புச்சத்து தேவையைப் பூர்த்தி செய்யக்கூடியது என்கிறார் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவரான டாக்டர் ஸ்ரீவித்யா. இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுவரொட்டியின் நன்மைகள் பற்றி பதிவிட்டுள்ளார். அதில் உள்ள விவரம் பின்வருமாறு.

    சுவரொட்டி நன்மைகள்:

    1. சுவரொட்டி ஹீம்(HEME)இரும்பின் வளமான இயற்கை ஆதாரங்களில் ஒன்றாகும். இரும்புச்சத்து குறைபாடுள்ள, ரத்த சோகையைத் தடுக்கவும் சிகிச்சையளிக்கவும் உதவுகிறது மற்றும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.
    2. இதில் உள்ள வைட்டமின் பி12 மற்றும் ஃபோலேட் சிவப்பு ரத்த அணுக்கள் உற்பத்தியை ஆதரிக்கிறது மற்றும் ஆற்றல் அளவை மேம்படுத்துகிறது. மேலும், நரம்பு ஆரோக்கியம் மற்றும் டிஎன்ஏ தொகுப்புக்கு முக்கியமானது.
    3. முழுமையான புரதங்களை வழங்குகிறது. இதன் விளைவாக தசை பழுது, வலிமை மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவுகிறது.
    4. பாரம்பரியமாக பலவீனம், சோர்வு மற்றும் நோயிலிருந்து மீண்டு வருபவர்களுக்கு உயிர்ச்சக்தியை மீட்டெடுக்க சுவரொட்டி வழங்கப்படுகிறது.
    5. மண்ணீரல் சாறுகள் (பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன) வெள்ளை ரத்த அணு உற்பத்திக்கு உதவுவதன் மூலம் நோயெதிர்ப்பு செயல்பாட்டை ஆதரிப்பதாக நம்பப்படுகிறது.
    6. சில பாரம்பரிய நடைமுறைகளில், ஆண் இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் உயிர்ச்சக்தியை மேம்படுத்த சுவரொட்டி பரிந்துரைக்கப்படுகிறது. சிறுநீரகத் தொற்று மற்றும் கல்லீரல் பிரச்சனைகளைத் தடுக்கவும் உதவுகிறது.
    7. சுவரொட்டியை மிளகு, பூண்டு, சீரகம் போன்ற மசாலாப் பொருட்களுடன் சேர்த்து செய்து சாப்பிட்டால் செரிமானம் சீராகும். மேலும், இது வாய்ப்புண், வயிற்றுப்புண் போன்றவற்றை ஆற்றும் திறன் கொண்டது.
    8. இதில் உள்ள சத்துக்கள் முடக்குவாதம் (Rheumatism) போன்ற எலும்பு மற்றும் மூட்டு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிப்பதாகக் கூறப்படுகிறது.
    கோப்புப்படம்

    எப்படி? எவ்வளவு சாப்பிடலாம்?

    சுவரொட்டியை சமைக்கும் முறை மற்றும் அளவு அதன் முழுமையான பலனைப் பெற மிகவும் முக்கியம்.

    • சுவரொட்டியின் வெளிப்புறத்தில் காணப்படும் மெல்லிய தோலை நீக்கிவிட்டு சமைப்பது நல்லது. இதை நெருப்பில் வாட்டி (சுட்டு) சாப்பிடுவது பாரம்பரிய முறை. சுவரொட்டியின் இரண்டு புறத்திலும் கீறல் போட்டு அதில் உப்பு மற்றும் மிளகுப் பொடி சேர்த்து தீயில் சுட்டு சாப்பிடலாம்.
    • இல்லையென்றால் குக்கரில் நான்கு விசில் வைத்து சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி குழம்பு, சூப், பொரியல் செய்து சாப்பிடலாம்.
    • ரத்த சோகை போன்ற தீவிரப் பிரச்சனை உள்ளவர்கள் அல்லது கர்ப்பிணிகள் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை சுவரொட்டி உட்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. 50 கிராம் முதல் 100 கிராம் வரை உணவில் சேர்ப்பது போதுமானதாகும்.
    • சுவரொட்டி ஆரோக்கியமானது என்றாலும், சிலருக்கு இது ஒவ்வாமையை (Allergy) ஏற்படுத்தலாம் அல்லது வேறு சில உடல்நலக் காரணங்கள் இருக்கலாம். எனவே, கர்ப்பிணிகள் மற்றும் நாட்பட்ட நோய் உள்ளவர்கள் இதைத் தங்கள் உணவில் சேர்ப்பதற்கு முன்பு மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.
    • சுவரொட்டியில் உள்ள இரும்புச்சத்து உடலில் வேகமாக உறிய, சுவரொட்டி உட்கொண்டதும் வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை பழ ஜூஸ் அல்லது நெல்லிக்காய், ஆரஞ்சு, கொய்யாப்பழம் போன்றவற்றை சாப்பிடலாம்.
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமன்னார் வளைகுடா நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி!
    Next Article மாதவிடாய் நாட்களில் கால்கள் வலிப்பது ஏன்? தடுப்பது எப்படி?
    Editor TN Talks

    Related Posts

    சர்வதேச யோகா தினம் 2026!. உடலையும் மனதையும் காக்கும் யோகாசனத்தின் அசாத்திய நன்மைகள்!

    June 21, 2026

    இதயத்தை பாதுகாக்கும் கோவிட் தடுப்பூசிகள்!. கட்டுக்கதைகளை நம்பாதீர்கள்!. புதிய ஆய்வின் உண்மை!

    June 18, 2026

    நீங்கள் சாப்பிடுவது ஐஸ்கிரீமா… ப்ரோசன் டெசர்டா? – வரிசைக் கட்டும் நோய்கள்… எச்சரிக்கும் நிபுணர்கள்!

    June 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.