ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்காததை கண்டித்து காங்கிரஸ் மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்திற்கு சென்சார் போர்டு சான்றிதழ் வழங்காத நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளது. ஜனநாயகனுக்கு தணிக்கை சான்றிதழ் கோரி தொடரப்பட்ட வழக்கு நாளை மறுநாள் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்த சூழலில் ஜனநயாகன் படத்திற்கு மத்திய அரசு அழுத்தம் தருவதாகவும் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி ஜனநாயகனுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ஜனநாயகன்’ படத்தை தடுக்க தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் முயற்சிப்பது தமிழக கலாச்சாரத்தின் மீதான தாக்குதல். தமிழக மக்களின் குரல்களை அடக்குவதில் நீங்கள் ஒருபோது வெற்றிப்பெற மாட்டீர்கள் மோடி என குறிப்பிட்டு விமர்சித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version