எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்பட வேண்டும் என்பதற்காக சி.வி.சண்முகம் அணியில் இருந்து வந்துவிட்டதாக, ஆற்காடு அதிமுக எம்.எல்.ஏ சுகுமார் தெரிவித்துள்ளார்.

தவெகவுக்கு ஆதரவளித்தது தொடங்கி அதிமுக எம்.எல்.ஏக்கள் இரு பிரிவாக பிரிந்து நிற்கின்றனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அணியில் 22 எம்.எல்.ஏக்களும், சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அணியில் 25 எம்.எல்.ஏக்களும் உள்ளனர்.

இந்த நிலையில் சிவிஎஸ் தரப்பைச் சேர்ந்த ஆற்காடு எம்.எல்.ஏ சுகுமார், இன்று சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்கு வந்து அவரது அணியில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகுமார், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஒன்றாக வேண்டும் என்பதற்காகவே தான் வந்ததாகத் தெரிவித்தார்.

அதிமுக எம் எல் ஏக்கள் 3 பேர் தவெக வில் இணைந்தது பற்றிய கேள்விக்கு போனால் போகட்டும் என பதிலளித்த அவர்,

சி.வி.சண்முகம் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமிய தேடி வந்துவிடுவார்கள் எனவும் தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version