Close Menu
    What's Hot

    எடப்பாடி பெயரை தவிர்த்த எஸ்பி வேலுமணி.. அதிமுகவினர் எதிர்ப்பு முழக்கம்.. நடந்தது என்ன?

    விவாகரத்து வழக்கில் நீடிக்கும் தாமதம்.. விஜய் – சங்கீதா வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!!

    அரசு சேவைகளை தனியார்மயமாக்குவது இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும்: அன்புமணி எதிர்ப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
    அரசியல்

    குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

    Editor web2By Editor web2August 7, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    assembly eps
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    காவிரி நீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

    சட்டப்பேரவையில் இன்று காவிரி நீர் பிரச்சினை மற்றும் குறுவை சாகுபடி பாதிப்பு தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை முன்வைத்து பேசிய எடப்பாடி பழனிசாமி, காவிரி நதிநீர் பிரச்சினை மற்றும் தண்ணீர் இன்றி குறுவை பயிர்கள் வறண்டு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக மட்டுமல்லாமல் அனைத்து கட்சித் தலைவர்களும் தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.

    அதிமுக மற்றும் திமுக ஆட்சிக் காலங்களில் காவிரி பிரச்சினை எழுந்தபோது, அனைத்துக் கட்சித் தலைவர்கள், விவசாய அமைப்புகள் மற்றும் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்றும், அதுவே நடைமுறையாக இருந்ததாகவும் அவர் கூறினார்.

    இந்த ஆண்டு கர்நாடக அணைகளில் போதுமான அளவு தண்ணீர் இருந்தும், தமிழகத்திற்கு உரிய நீரை திறந்து விட கர்நாடக அரசு மறுத்துவிட்டதாக அவர் குற்றம்சாட்டினார். காவிரி மேலாண்மை ஆணையம் விநாடிக்கு 3,500 கனஅடி நீரை திறக்க உத்தரவிட்டிருந்தும், அந்த உத்தரவை கர்நாடக அரசு அமல்படுத்தவில்லை என்றார். இதனால் குறுவை சாகுபடிக்கு தேவையான நேரத்தில் தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்ததாகவும் தெரிவித்தார்.

    மேலும், தற்போது கர்நாடக அணைகள் நிரம்பியதால் உபரி நீர் மட்டுமே தமிழகத்திற்கு வந்து கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், அதற்குள் விவசாயிகள் சந்திக்க வேண்டிய பாதிப்பு ஏற்கனவே ஏற்பட்டுவிட்டதாக வேதனை தெரிவித்தார்.

    “இந்த ஆண்டு ஆழ்துளை கிணறு பாசனத்தை மட்டுமே நம்பி சுமார் 2 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. அதில் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் வறண்டு சேதமடைந்துள்ளன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக களத்திற்கு அனுப்பி சேதத்தை கணக்கிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.

    CauveryWaterDispute EdappadiPalaniswami KuruvaiCrop TamilNaduFarmers
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகாவிரி விவகாரத்தை திசை திருப்பவே தொகுதி மறுசீரமைப்பு எம்.பி.க்கள் கூட்டம்: திமுக குற்றச்சாட்டு
    Next Article ஒவ்வொரு தமிழர் தலையிலும் ரூ.1.28 லட்சம் கடனா? சட்டசபையில் வெடித்த காரசார விவாதம்!
    Editor web2
    • Website

    Related Posts

    எடப்பாடி பெயரை தவிர்த்த எஸ்பி வேலுமணி.. அதிமுகவினர் எதிர்ப்பு முழக்கம்.. நடந்தது என்ன?

    August 7, 2026

    விவாகரத்து வழக்கில் நீடிக்கும் தாமதம்.. விஜய் – சங்கீதா வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!!

    August 7, 2026

    அரசு சேவைகளை தனியார்மயமாக்குவது இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும்: அன்புமணி எதிர்ப்பு

    August 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    எடப்பாடி பெயரை தவிர்த்த எஸ்பி வேலுமணி.. அதிமுகவினர் எதிர்ப்பு முழக்கம்.. நடந்தது என்ன?

    விவாகரத்து வழக்கில் நீடிக்கும் தாமதம்.. விஜய் – சங்கீதா வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!!

    அரசு சேவைகளை தனியார்மயமாக்குவது இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும்: அன்புமணி எதிர்ப்பு

    UPI கட்டணம் குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம்.. யாருக்கு பொருந்தும்? முழு தகவல்!

    ’நீட் தேர்வு வினாக்களை மனப்பாடம் செய்து கொண்டு சென்ற பாட நிபுணர்கள்’- அதிர்ச்சி தகவல்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.