தமிழ்நாட்டிற்கு வந்துள்ள காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி கொட்டும் மழையிலும் மாணவர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.
நீலகிரி மாவட்டம் கூட்டலூரில் உள்ள தனியார் பள்ளியின் பொன்விழாவில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வருகை தந்தார். கூடலூர் வந்த ராகுல் காந்திக்கு திமுக சார்பில் எம்.பி ஆ.ராசா, காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் பள்ளி நிர்வாகம் உற்சாக வரவேற்பும் அளித்தனர். பின்னர் அப்பகுதியை சேர்ந்த தோடர் பழங்குடியின மக்கள், ராகுல்காந்திக்கு சால்வை அணிவித்து உற்சாக நடனமாடினர்.
ராகுல்காந்தியும் பதிலுக்கு அவர்களுடன் சேர்ந்து நடனமாடி மகிழ்ந்தார். பின்னர், நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்ச்சியின் விழா மேடையில் ராகுல்காந்தி உரை நிகழ்த்திய மழை கொட்டியது. அப்போது நகர்ந்து செல்லாத ராகுல்காந்தி கொட்டும் மழையிலும் நனைந்தபடி மாணவ, மாணவிகளின் கேள்விக்கு பதிலளித்து அவர்களை ஊக்கப்படுத்தினார்.
அறிவார்ந்த சமூகங்களை ஆசிரியர்களே உருவாக்குகிறார்கள் என்ற ராகுல்காந்தி, மாணவர்கள் மழையில் நனைவதை பார்த்ததும் அவர்களிடம் மன்னிப்பு கோரினார்.
