இன்று மதுராந்தகத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி வருவதை ஒட்டி பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழக சட்டமன்ற தேர்தலை ஒட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்தல், பிரச்சாரம் உள்ளிட்டவைகளில் தீவிரமடைந்து வருகின்றன . அந்த வகையில் அதிமுக, பாஜகவுடன் டிடிவி தினகரனின் அமமுகவும் கூட்டணி சேர்ந்துள்ளன.

இந்த சூழலிப் இன்று மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கேரளாவில் இருந்து இன்று மதியம் 1.15 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் மோடி மதியம் 2.15 மணிக்கு ஹெலுகாப்டர் மூலம் மதுராந்தகம் புறப்படுகிறார். அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரை சந்தித்து பேசுகிறார். மாலை 3.10 மணிக்கு பொதுக்கூட்டத்தில் உரையாடும் மோடி தனது பேச்சை முடித்து கொண்டு 4 மணியளவில் சென்னை விமான நிலையம் மூலம் மீண்டும் டெல்லி புறப்படுகிறார். மோடியின் வருகையை ஒட்டி பாதுகாப்புகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version